March 05, 2010

சுவாமியின் லீலையும், சுழற்றிய சிம்பாப்வேயும்


இந்த மூன்று நாட்களாக உடல்நலக் குறைவினால் அலுவலகம் போகாமல் இருந்த நேரம் கொஞ்சம் பதிவுகள்,பழைய நூல்கள், தொலைகாட்சி,பங்கு சந்தை வர்த்தகம் என்று ஏதோ பொழுதைப் போக்காட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.

நித்தியானந்தா வீடியோ பரபரப்பு சுவாரஸ்யங்கள் நல்லாத் தானிருக்கு.. எப்போது தான் எம் சமூகம் திருந்துமோ?
இனிவரும் சில நாட்களுக்கும் நித்தியானந்தா - ரஞ்சிதா பரபரப்பு ஓயப்போவதில்லை.. ஏதோ நடக்கட்டும்..
எதுவேண்டுமானாலும் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு தான்.ஆனால் முகமூடி போட்டு அப்பாவிகளை ஏமாற்றாமல், செய்வதை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.

இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை.

இப்போது கதவு திறந்து சகலமும் விளங்கிப் போச்சு.

கடவுள்களும்,சமயங்களுமே உண்மையா இல்லையா என்று நிரூபிக்கப்படாத நிலையில் கடவுளகளை அடைய வழிகாட்டுகிறோம் என்று சப்பைக்கட்டு கட்டும் இந்தப் போலி ஆசாமிகளை எப்படித்தான் நம்பி நாம் இளிச்சவாயர் ஆகிறோம் என்று கொஞ்சமாவது சிந்திப்பதுண்டா?

இதற்கு ஊடகங்கள் வேறு விளக்குப்பிடித்து ஆலவட்டம் ஆட்டுகின்றன.
வெட்கித் தலைகுனிந்து தாம் தவறாக விளம்பரப்படுத்தி ஏமாற்றிய அப்பாவிகளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்.
இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..

ம்ஹூம்.. திருந்த மாட்டோமே..


இதற்கிடையில் நேற்று இரவு மேற்கிந்தியத் தீவுகள்-சிம்பாப்வே விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழமையாக என்றால் உப்பு சப்பற்ற போட்டிகளில் ஒன்று என்று நான் இதை ஒதுக்கிவிட்டு வேறு வேலை பார்த்திருப்பேன்.
எனினும் வேறு வேலை இல்லாததாலும்,போழுதுபோகாததாலும் மட்டுமல்லாமல் இந்தப் போட்டியை நான் சுவாரஸ்யமாகப் பார்த்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போல மேற்கிந்தியத் தீவுகளை சிம்பாப்வே ட்வென்டி 20 போட்டியிலே மண்கவ்வ வைத்தது தான் அது.

மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தும் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து வியூகம் அமைத்து சிம்பாப்வே மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியமை அபாரம்.

நேற்றைய போட்டியில் தலைவர் கெயில் வந்தும், சந்தர்போல் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகளை சிம்பாப்வே இரண்டு ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சரிவில் மேலும் ஒரு குழி இது.
புதிய பயிற்றுவிப்பாளராக ஒடிஸ் ஜிப்சன் வந்தபின் அடுத்தடுத்த இரு தோல்விகள்.. இரண்டும் கடைநிலை அணியாகக் கருதப்படும் சிம்பாப்வேக்கு எதிராக.

நிதானமாக சிம்பாப்வே பெற்ற சராசரி 254 என்ற இலக்கை அடைவதில் மேற்கிந்தியத்தீவுகள் சிரமப்பட்டது என்பது எவ்வளவு கேவலம்.
அதிலும் முதல் மூவரைத் தவிர வேறு யாரும் 20 ஓட்டங்கள் தாண்டவில்லை.
தனது முதல் போட்டியில் விளையாடிய அட்ரியன் பரத்,தலைவர் கிறிஸ் கெயில் ஆகியோரின் அரைச் சத்தங்களும், இறுதிக்கட்டம் வரை போராடி சந்தர்போல் பெற்ற 70 ஓட்டங்களும் இல்லாவிட்டால் இன்னும் அவமானமாகியிருக்கும்.

முன்னதாக சிம்பாப்வே சார்பில் சிபாண்டா நிதானமாக ஆடிப் பெற்ற 95 ஓட்டங்கள் அருமையான ஒரு கிரிக்கெட் விருந்து.சதம் பெறுவார் என்று எதிர்பார்த்திருக்க கெமர் ரோச்சின் அதிவேகப் பந்தொன்றில் தனது துடுப்பும் முறிந்து ஆட்டமிழந்தார் சிபாண்டா.
தைபுவின் அதிரடி அரைச் சதமும் கலக்கல்.

ஆனால் இந்தப் போட்டியில் என்னைக் கவர்ந்த விடயமும், இலங்கை,இந்திய அணிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமும் ஒன்றுள்ளது.

சிம்பாப்வே அணித்தலைவர் ப்ரோஸ்பேர் உட்செயா தனது சுழல் பந்துவீச்சாலர்களைக் கையாண்டு எதிரணிகளை மடக்கும் யுக்தி.

தனது நான்கு சுழல் பந்துவீச்சாளர்களின் நாற்பது ஓவர்களையும் (உட்செயாவும் ஒரு சுழல்பந்துவீச்சாளரே) பூரணமாக சுழற்சி முறையில் பயன்படுத்தியவர், இவர்களில் மூவரைக் கொண்டே தமது பந்துவீச்சை ஆரம்பித்து துடுப்பாட்ட வீரர்களைக் குழப்பியடித்தார்.

கெயில் அதிரடியாடினாலும், மத்தியவரிசை வீரர்கள் பேய்,பிசாசுகளைக் கண்டது போல ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக தனது இளைய,துடிப்பான வேகப்பந்து வீச்சாளர் முதல்போட்டியில் விளையாடிய மட்சிகினஎரி மூலமும்,பகுதிநேர மிதவேகப் பந்துவீச்சாளர் சிகும்பரா மூலமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சமாதி எழுப்பினார்.

சிம்பாப்வே அணியினால் தம் பலம் என்று நினைக்கும் சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு இவ்வாறு அடுத்தடுத்து அதிரடித் துடுப்பாட்ட வரிசை கொண்ட அணியொன்றை அலறியடித்து தோற்கடிக்க முடியுமென்றால் சுழல் பந்துவீச்சையே பிரதான பலமாகக் கொண்டுள்ள இலங்கை,இந்திய அணிகளால் ஏன் இது முடியாது?

அசாருதீன் காலத்தில் இந்தியாவும், அர்ஜுன ரணதுங்கவின் காலத்தில் இலங்கையும் சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்டு எதிரணிகளை உருட்டியது இப்போது மறந்து போனதா?

இப்படியே போனால் உபகண்ட ஆடுகளங்களில் நடக்கும் அடுத்த உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே பல பெரிய தலைகளை உருட்டித் தள்ளிவிடும்.

துடுப்பாட்ட வீரர்களை மையமாக வைத்து இவ்விரு அணிகளும் இயங்குவது சரி தான். ஆனால் மற்றவர்கள் இன்னும் பூரணமாகக் கற்றறியாத சுழல்பந்து வீச்சுக் கலையை எம் மர்மக் கலையாக வளர்த்திருக்கலாம்.

இந்திய அணியிலும் இலங்கை அணியிலும் முரளி,ஹர்பஜன் தவிர இன்னும் எத்தனை நல்ல,திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்?

பகுதிநேரமாகப் பந்துவீசக் கூடிய திறமையான சச்சின், சேவாக், யுவராஜ்,ரெய்னா,டில்ஷான்,சமரவீர,சனத் ஜெயசூரிய, ஜடேஜா இவர்களிடமிருந்து முழுமையான பயன்பாட்டை இன்னமும் பெறலாம் என்பதே என் கருத்து.

சிம்பாப்வேயைப் பார்த்து இனிவரும் காலத்தில் இதைக் கருத்தில் எடுப்பார்களா பார்க்கலாம்.

முன்பிருந்து எனக்கிருக்கும் கேள்வி இதுவே.. எமது பலத்தை நாம் சரியாகப் பிரயோகிக்கின்றோம் இல்லை.
ஆசிய நாடுகள் எல்லாவற்றிற்கும் எல்லாத் துறைகளிலும் உள்ள பிரச்சினை இது. மற்றவர்களைப் பார்த்து எம்மை வடிவமைக்கிறோம்.
எங்கள் பலம் என்னவென அடையாளம் கண்டு அதன் அடிப்படையிலேயே எம்மைக் கட்டியெழுப்பவேண்டும்,இது எல்லாவற்றுக்குமே பொருந்தும்..
ஆசியாவில் வளர்ந்து நிற்கும் ஜப்பானைப் பார்த்து ஏனைய எல்லாத் துறைகளிலும் நாம் இதைக் கற்று உட்புகுத்தவேண்டும்.

22 comments:

KANA VARO said...

தலைப்பே கலக்கலா இருக்கே!
சிம்பாவேயின் வளர்ச்சி அபரிமிதம்.. சாமியார்… நோ கமெண்ட்ஸ்

Unknown said...

சாய்பாபாவோ-அம்மா பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!

யாரோ - ? said...

அம்மா பகவானும் மாட்டுப்பட்டிருக்கார் லோஷன் அதைப்பத்தியும் தெரியப்டுத்துங்கோகோ

http://thatstamil.oneindia.in/news/2010/03/05/devotees-visit-decline-at-kalki-as.html

யாரோ - ? said...

அம்மா பகவானும் மாட்டுப்பட்டிருக்கார் லோஷன் அதைப்பத்தியும் தெரியப்டுத்துங்கோகோ

http://thatstamil.oneindia.in/news/2010/03/05/devotees-visit-decline-at-kalki-as.html

Ramanc said...

இவருடை புத்தகம் கதவைத்திற காற்று வரட்டும். ஆனால் சன் தொலைக்காட்சி கதவை மட்டும் திறக்காமல் சாமியாரின் எல்லாத்தையும் திறந்து போட்டங்கள்..

மன்மதகுஞ்சு said...

"இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்" கைகாசு சம்பாதிக்க நினைப்பவர்களுக்கெல்லாம் நீதி நியாயம் ஒன்றுமேயில்லை,எத்தனையோ அரசியல்வாதிகள் தவறாக போனார்கள்,ஆனால் அவர்கள் காசு தந்தால் அவர்களின் தேர்தல் விளம்பரம் போட மாட்டீர்களோ வானொலியில் ???????

வான்நிலவன் said...

அண்ணா,நித்தியானந்தாவோ அல்லது அம்மா பகவானோ செய்தது எவளவு பிழையோ அதே அளவு பிழை சன் விட்டுக்குள் கொண்டுவந்த நீலப்படம் அதைவிட கொடுமை இதை மணிக்கொருமுறை காட்டியது.ஒரு காலத்தில் இவர்களை கடவுள் ஆக்கியதும் இதே ஊடகங்கள் தான்.
இதைவிட கொடுமை சாரு இவருக்கு வக்காலத்து வாங்கியது. சாருக்கு நேரம் ரெம்ப சரி இல்லை போல இருக்கு.தமிழ் பதிவுகளில் நித்தியானந்தாவுக்கு இணையாய் சாரு கிழித்து தோரணம் கட்டப்பட்டு இருக்கிறார்
சங்காவுக்கு சுழல் பந்து வீச்சாளர்களை கண்டாலே பிடிக்குது இல்லை.இவர்களை சரியாய் உபயோகித்திருந்தால் இறுதி இந்திய பயணத்தின் சில முடிவுகளை மாத்தி இருக்கலாம்

யோ வொய்ஸ் (யோகா) said...

/////இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்.
இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..
////

இதை நாம் எவ்வளவு காலமாக கூறுகிறோம் ஆனாலும் யாரும் இதில் தலையி்டுவதாக வில்லையே.


இலங்கை அணி இப்போது பகுதி நேர அல்லது முழு நேர சுழல் பந்து வீச்சாளர்களை நம்புவதில்லை ஏனென தெரியவில்லை.

தர்ஷன் said...

நிச்சயமாக அரசுகள் தலையிட்டு இவ்வாசிரமங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

nadpudan kathal said...

லோஷன் அண்ணா என்னதான் நாங்கள் சாமியார் பற்றி சொன்னாலும் எம்மவர்களில் உள்ள மூட நம்பிக்கையர் திருந்தாமல் யாரும் திருந்த போவதில்லை....சாமியார்களையும் சேர்த்து.....

சிம்பாவே அணி அற்புதம் சிறப்பான விளையாட்டு... அவர்கள் அதை தொடர்ந்தால் ரொம்பவே நன்று ...

தனா said...

கதவை திற காற்று வரு எண்டவருக்கு யாரோ கதவை திறந்து கேமரா வச்சிடடன்கையா...அவ்....................

Subankan said...

சொல்லிவைத்தாற்போல் ஒரே தினத்தில் பல போலிகள் சமய பேதமின்றி மாட்டியிருக்கிறார்கள் அண்ணா, இனியாவது திருந்துவார்களா? ம்ஹும்

Anonymous said...

எத்தனை தடவைகள் இந்த மாதிரி ஆசாமிகளின் முகத்திரையை கிழித்தாலும் அவர்களின் அலம்பல்களுக்கு ஊடகங்களும், பெரியதலைகளும் பக்கபலமாக இருப்பது கவலைகிடமே...
இதில் பெரிய அக்க போரான விசயமே நித்தியின் கதவைத்திறந்து , பார்பவர்களுக்கு காற்றை வரவைத்த சில ஊடகங்களின் அய்யோகியதனமே!!.. விளம்பரத்துக்காகவும், சுவாரசியதுக்காகவும் எதுவும் செய்ய துணிந்த இம்மாதிரி ஊடகங்களை "........................."(errrrr)
கடுப்பு ஏத்துறாங்க ......

//சிம்பாப்வே அணியினால் தம் பலம் என்று நினைக்கும் சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு இவ்வாறு அடுத்தடுத்து அதிரடித் துடுப்பாட்ட வரிசை கொண்ட அணியொன்றை அலறியடித்து தோற்கடிக்க முடியுமென்றால் சுழல் பந்துவீச்சையே பிரதான பலமாகக் கொண்டுள்ள இலங்கை,இந்திய அணிகளால் ஏன் இது முடியாது?//

சாரி பாஸ் .... நாங்க திருந்தவே மாட்டோம்!......

புல்லட் said...

இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை. //

நவீன சாமி அளப்புமானியாக லோசன் அண்ணா தொழிற்படுவார்.. :P

யெகன் said...

நானும் சாமியார் ஆகப்போறன். பெயர்: ஆத்மவிந்தார்ச்சன சர்வகாமானத்தா! வெள்ளைக்காரங்கள் என்னை iSwamy எண்டு செல்லமா கூப்பிடப்போகினம். அப்பிடியே நயன்தாரவை target பண்ணி ஒரு கூட்டுப்பிரார்த்தனை தொடங்கவேண்டியது தான்!
அதுக்கும் ஒரு பெயர் இருக்கு. "iSwamyயின் சத்சங்கம்!"

இலங்கன் said...

//இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்.
இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..//

ஓமோம் நானும் பாத்தேன்....
என் செய்ய யாரொடு நோக யார்க்கெடுத்துரைக்க...
எதுக்கும் கதவை பூட்டியே வைப்பம் அசுத்தக் காற்றுகள் வந்தாலும்... ஹி.. ஹி..

archchana said...

//இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை. //
உண்மைதான். கண்ணும் வாயும் ஆட்களை அளவு எடுத்தலில் முக்கியமானவை. நானும் இப்படிதான் நினைத்தேன்

கன்கொன் || Kangon said...

//இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை. //

ஆகா என்ன கலை என்ன கலை...
என்ன ஒரு அதிசயம்....
உங்களிடம் ஒரு அசாத்திய சக்தி இருக்கிறது...
அம்மனே உங்களில் குடியிருக்கிறாள்...
உங்களை நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்.
என்னை உங்கள் வலது, இடது கையாக ஏற்றுக் கொள்ளுங்கள்...


ஒன்றை மட்டும் நான் நித்தியானந்தா விடயத்தில் கவனித்தேன் அண்ணா...
நித்தியானந்தா விடயத்தில் இருந்த ஆர்வத்தை எம்மவர்கள் கல்கி பகவான் என்கிற விஜயகுமாரின் ஆச்சிரமத்தில் தெலுங்கு TV9 அலைவரிசையினர் படமெடுத்ததில் காட்டவில்லை... :(
என்னைப் பொறுத்தவரை இலங்கையில் நித்தியானந்தாவை விட விஜயகுமார் ஒரு பெருங்கள்ளன்...



எம்மவர்கள் திருந்தமாட்டார்கள்...
இன்னும் ஒரு மாதத்தில் திரும்பவும் நித்தியானந்தா வந்து 'உணர்வுகளை அடக்குவது எப்படி, தேவையற்ற உணர்வுகளை அடக்குவது எப்படி, நான் அவதாரம், பணியாரம்' என்று சொல்ல அதைக் கேட்டு தலையாட்டத்தான் போகிறோம்...


அதிர்ஷ்ரவசமாக நானும் சிம்பாப்வே போட்டியைப் பார்த்தேன்.
ஆரம்பத்தில் சிபாண்டா மெதுவாகத் துடுப்பெடுத்தாட எரிச்சல் வந்தாலும் பிறகு அவரின் திட்டம் விளங்கியது...
He paced his innings well...
தைபுவும் அழகாக ஆடினார்... reverse sweeps ஐ பயமின்றி அடித்தது வியப்பாக இருந்தது...
மேற்கிந்தியத் தீவுகள் கீழ்நோக்கிப் போகிறது..
ஒரு காலத்தில் உலகை ஆட்டிப்படைத்த அணி என்று சொன்னால் யாரும் நம்பவா போகிறார்கள்?


நல்ல பதிவு அண்ணா...

வந்தியத்தேவன் said...

இங்கே லண்டனில் ஒரு தொலைக்காட்சியில் என்னை வாழவைக்கும் இலங்கைக்த் தமிழர்களுக்கு நன்றி என அம்மா பகவான் விளம்பரம் செய்கின்றார். உலகின் இளிச்சவாய் இனம் நம்மினம்.

சிம்பாவே மன்னிக்கவும் கிரிக்கெட்டை மறந்துவிட்டேன்.

Bavan said...

//இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..//

அது மட்டுமா இன்று காலை விஜய் டிவியில் அந்தக் குடும்ப சாமிக்கு விளம்பரம்... பார்த்ததும் கடுப்பு உச்சந்தலைக்கு ஏறியது.. ஆனால் இவங்களை பார்த்து கடுப்பாகி என்ன பயன்... சனத்துக்கு விளங்க வேணும்..

ராஜகீர்த்தி said...

இனிமேல் அனைத்து பிரமச்சரிய சாமியார்களின் ஆசிரமங்களில் " சாமியார் குடும்பக்கட்டுப்பாடு" செய்து கொண்ட வைத்திய சான்றிதழ் வைத்துக்கொண்டால்தான் அனுமதி என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... என்ன சொல்லுறீங்க...

MatureDurai said...

"சாய்பாபாவோ-அம்மா பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!"
என்று முரளிதரன் கூறுகிறார்.அதுசரி,
பூனைக்கு யார் மணி கட்டுவது?யாராவது பொன் முட்டையிடும் வாத்தை கொன்றுவிட சம்மதிப்பார்களா?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner