August 20, 2009

நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா?



நம் நாட்டிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒரு சிங்கம்!

(அண்மையில் யாராவது தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு போயிருந்தால் பரிதாபமான நிலையிலுள்ள சிங்கம் பார்த்திருப்பீர்கள்)

ஒழுங்கான சாப்பாடு அதற்குக் கிடைப்பதேயில்லை... காய்ந்து போன ஒரு சொற்ப இறைச்சி சாப்பிட்டு நாக்கு மரத்துப்போய் இதிலிருந்து ஒரு விடிவு கிடைக்காதா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டும், பிரார்த்தனை செய்துகொண்டுமிருந்தது.

அதன் நீண்டகால பிரார்த்தனை ஒரு நாள் பலித்தது.

அரபு நாடொன்றிலிருந்து வந்த ஷேக் ஒருவர் அந்த சிங்கத்தை தம் நாட்டிலுள்ள மிருகக்காட்சி சாலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.

நம்ம நாட்டவர் கேட்டதை விட அதிகமாகவே கொடுத்து சிங்கத்தை அரபு நாட்டுக்கு கூட்டிச்சென்றுவிட்டார்.

அரபு நாட்டு மிருகக்காட்சிசாலைக்கு வந்ததிலிருந்து சிங்கத்து;க்கு பயங்கரமான குஷி! மூன்றுவேளையும் விதவிதமான இறைச்சி உணவுகள் கிடைப்பது போலக் கனவு வேறு!

வந்த முதல் நாள் காலை - சிங்கம் இருந்த கூட்டுக்கு வந்த பணியாள் பெரியதொரு பொதியைக் கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்.

உள்ளே ஒட்டக இறைச்சியாக இருக்குமோ அல்லது இதுவரை உண்ணாத வேறுவகை மாமிசமாக இருக்குமோ என்று ஆர்வத்தோடும், பசியோடும் கஷ்டப்பட்டு, அவசரஅவசரமாக அந்தப் பொதியை சிங்கம் திறந்தால், அதற்குள் இருந்தது-

ஒரு சீப்பு வாழைப்பழம்!

சரி, நாடுவிட்டு நாடு வந்த காரணத்தினால் வயிற்றுக்கோளாறு, சமிபாட்டுப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று தான் வாழைப்பழம் தருகிறவர்கள் போல இருக்கு... என்ன ஒரு அக்கறை என்று நினைத்துக்கொண்டே வாழைப்பழத்தை சாப்பிட்டது சிங்கம்.

(புலி தான் பசித்தாலும் புல்லைத்தின்னாது... சிங்கம் எது வேண்டுமானாலும் தின்னுமாம்)

ஆனால் தொடர்ந்து பகல், இரவு, மறுநாள் காலை எனத் தொடர்ந்தும் வாழைப்பழமே கிடைத்துவர சிங்கம் சூடாகிவிட்டது.

பணியாளரிடம் கோபமாக கர்ச்சித்தது... 'நான் காட்டுக்கே ராஜா தெரியுமா? எனக்குப் போயும் போயும் வாழைப்பழம் போடுகிறாயே... அறிவில்லை?'

பணியாளர் ரொம்பப் பணிவாகப் பதிலளித்தார்.

'அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்... உனக்கு ஒன்று தெரியுமா? நீ வந்திருப்பது குரங்கின் தலைமாற்றப்பட்ட பாஸ்போர்ட்டிலும், குரங்கின் விசாவிலும்'

பி.கு :- சிங்கப்பூர் சென்று திரும்பிய சிங்கம் வேறு - இந்த சிங்கம் வேறு.

பி.கு :- இன்று காலை எனது 'விடியல்' நிகழ்ச்சியில் சொல்லிய நகைச்சுவை இது!

எங்கேடா நயன்தாராவின் சிங்கம்னு தேடுறீங்களா?
கீழே பாருங்க..

நயன்தாராவின் சிங்கம்.. நல்லா இருக்கா? இந்த சிங்கம் தான் வாழைப்பழம் சாப்பிடுமா என்று எனக்கு ஒரு சந்தேகம்.. யாராவது தீர்த்து வையுங்களேன்..

பட அனுசரணை நண்பர் வந்தியத்தேவன்.. (இவர் ஒரு 'அந்த'மாதிரி பட களஞ்சியம்.. ) அது சரி வந்தியை யானை மணாளன் என்று சொல்கிரார்கலாமே.. ட்விட்டர் குருவி சொன்னது.. என்ன விஷயம் தோழா? ;)


45 comments:

தேஜஸ்வினி said...

என்ன கொடுமை சார் இது?? நயன்தாராவின் இடுப்பில் சிங்கம் ஜோராவே இருக்கு ஒருவேளை கிராபிக்ஸ் சிங்கமா இருக்குமோ?? இல்ல நான் இதுக்கு முன்னாடி அங்க சிங்கத்தை பார்த்ததில்லை இருந்தாலும் சிங்கம் இருக்கிற அளவுக்கு அங்க ஸ்பேஸ் இருக்குத்தான்

SShathiesh-சதீஷ். said...

என்ன கொடுமை அண்ணா. அண்ணா நயன்தாரா சிங்கமா????????? தம் இந்தப்படம் போட்ட பதிவெல்லாம் அண்ணி பார்க்கமாட்டாங்களா? நடக்கட்டும். ஆனால் நயனின் சிங்கத்தை பார்க்க வந்தால் நயனின் அங்கத்தையல்லா காட்டிவிட்டீர்க. இந்த சிங்கமும் சிங்கபூரிலா வாளைப்பலமா தின்றது.சொல்லாமல் சொல்லிட்டிங்க.

இரா பிரஜீவ் said...

அதுசரி சரியான சந்தேகம்தான். ஒருவேளை நயந்தாராவின் மணிக்கட்டில் உள்ள ஆளுக்கு தெரிந்தாலும் தெரியலாம்.

சுபானு said...

என்ன லோசன் அண்ணா.. வந்தியண்ணா மேல என்ன இவ்வளவு தாக்குதல்..

சுபானு said...

நயனின் படம் ரொம்ப நல்லாயிருக்கு.. வந்தியண்ணாவுக்கு நன்றி.. ;) (Winking)

ARV Loshan said...

தேஜஸ்வினி said...
என்ன கொடுமை சார் இது?? நயன்தாராவின் இடுப்பில் சிங்கம் ஜோராவே இருக்கு ஒருவேளை கிராபிக்ஸ் சிங்கமா இருக்குமோ?? இல்ல நான் இதுக்கு முன்னாடி அங்க சிங்கத்தை பார்த்ததில்லை இருந்தாலும் சிங்கம் இருக்கிற அளவுக்கு அங்க ஸ்பேஸ் இருக்குத்தான்//

அவங்க எத்தனை சிங்கம் பார்த்தவங்க.. ;)
என்ன சிங்கமோ அசிங்கம் இல்லைத் தானே..

================

ARV Loshan said...

SShathiesh said...
என்ன கொடுமை அண்ணா. அண்ணா நயன்தாரா சிங்கமா?????????//

சிங்கமா இல்லை அசிங்கமா என்பது வேறு பலரிடம் கேட்கவேண்டிய கேள்வி.. ;)


இந்தப்படம் போட்ட பதிவெல்லாம் அண்ணி பார்க்கமாட்டாங்களா? //

பார்ப்பாங்களே.. இதுல என்ன இருக்கு?

ஆனால் நயனின் சிங்கத்தை பார்க்க வந்தால் நயனின் அங்கத்தையல்லா காட்டிவிட்டீர்க.//

அட இதைப் பார்ரா.. எதோ பார்க்காத மாதிரி.. ;) என்னா நடிப்பு?

இந்த சிங்கமும் சிங்கபூரிலா வாளைப்பலமா தின்றது.சொல்லாமல் சொல்லிட்டிங்க.//
அடப்பாவி அதுக்குத் தானே பின்குறிப்பு கொடுத்திருக்கேன்.. தப்பா நினைக்காதீங்கப்பா.. இந்த சிங்கம் STEADYஆன சிங்கம்

ARV Loshan said...

இரா பிரஜீவ் said...
அதுசரி சரியான சந்தேகம்தான். ஒருவேளை நயந்தாராவின் மணிக்கட்டில் உள்ள ஆளுக்கு தெரிந்தாலும் தெரியலாம்.//

என்ட தேவா... ;) ஆண்டவான்னு சொன்னேன்.. ;)

=======================
சுபானு said...
என்ன லோசன் அண்ணா.. வந்தியண்ணா மேல என்ன இவ்வளவு தாக்குதல்..//

தாக்குதலா? தப்பு தப்பு.. இதெல்லாம் ஒரு தனி அன்பு.. நன்றி பகிர்வு.. உண்மையை சொன்னேன்.. :)

ப்ரியா பக்கங்கள் said...

சிங்கத்தை கண்டு பிடிக்கிறதுக்க நயனின் அங்கத்தை பர்ர்த்து சூடாகிட்டன் ராஜா !!!
இன்றைக்கு பார்த்த OWC களில் Better One !!!Lol

ARV Loshan said...

சுபானு said...
நயனின் படம் ரொம்ப நல்லாயிருக்கு.. வந்தியண்ணாவுக்கு நன்றி.. ;) (Winking//

நயன்தாரா வடிவாயிருந்தால் வந்திக்கு நன்றியா? பிரபுதேவா, விஷால்,சிம்பு வரிசையில் இனி வந்தியா? ;)

வந்தியத்தேவன் said...

//பட அனுசரணை நண்பர் வந்தியத்தேவன்.. (இவர் ஒரு 'அந்த'மாதிரி பட களஞ்சியம்.. ) //

அற்புதமான படக் களஞ்சியம் என வரவேண்டியது. ஒரு பெண்ணை மல்லிகா ஷெரவத்தின் உடையில் பார்த்ததில் லோஷனின் விரல்கள் மாறி டைப் பண்ணிவிட்டன.

//அது சரி வந்தியை யானை மணாளன் என்று சொல்கிரார்கலாமே.. ட்விட்டர் குருவி சொன்னது.. என்ன விஷயம் தோழா? ;)//

அண்ணே இது நாலுகால் யானைதானே, இல்லை ஏதும் கட்சி சின்னம் என்றால் நான் விளையாட்டுக்கு வரவில்லை.

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள் has left a new comment on your post "நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா?":

சிங்கத்தை கண்டு பிடிக்கிறதுக்க நயனின் அங்கத்தை பர்ர்த்து சூடாகிட்டன் ராஜா !!!
இன்றைக்கு பார்த்த OWC களில் Better One !!!Lol //


வாங்க சுவாமிகளே.. ஆசிரமம் எப்படி களை கட்டுதா?
சூடாகினா இருக்கவே இருக்கு உங்கள் நாட்டு வைத்தியங்கள்.. ;)
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.. உங்கள் ஆசிகள் தான் எல்லாமே.. ;)

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//பட அனுசரணை நண்பர் வந்தியத்தேவன்.. (இவர் ஒரு 'அந்த'மாதிரி பட களஞ்சியம்.. ) //

அற்புதமான படக் களஞ்சியம் என வரவேண்டியது. ஒரு பெண்ணை மல்லிகா ஷெரவத்தின் உடையில் பார்த்ததில் லோஷனின் விரல்கள் மாறி டைப் பண்ணிவிட்டன.//

அந்த மல்லிகாவின் படமும் ட்விட்டர் வழியாக உபயம் நீங்களே தான் என இதுவரை நான் யாருக்கும் சொல்லவில்லை.. ;)

//அது சரி வந்தியை யானை மணாளன் என்று சொல்கிரார்கலாமே.. ட்விட்டர் குருவி சொன்னது.. என்ன விஷயம் தோழா? ;)//

அண்ணே இது நாலுகால் யானைதானே, இல்லை ஏதும் கட்சி சின்னம் என்றால் நான் விளையாட்டுக்கு வரவில்லை.//

ஆமாம்.. உங்கள் பிரியத்துக்குரிய நாலு கால் யானையே தான்.. (மேலதிகவிபரமறிய வந்தியின் facebook படங்களை நாடுக)


அதுசரி தோற்றுக் கொண்டிருப்போரைக் கை தூக்கிவிட இலங்கையின் பிரபல வகர வரிசைப் பதிவரை (இவர் கல்கியின் ஒரு பாத்திரம்) ஒரு பிரபல கட்சி அணுகியதாகக் கேள்விப்பட்டேனே.. தெரியுமா?

வந்தியத்தேவன் said...

நீண்ட நாள் சந்தேகம் ட்விட்டர் என்றால் என்ன?

ப்ரியா பக்கங்கள் said...

ஏதோ நம்ம பக்த கோடிகளின் புண்ணியத்தால் மடம் நல்லா ஓடிட்டு இருக்கு.
குளிர் காலம் வருது கோடினிகள் எல்லாம் அவதி படுவாங்கள் என்று அறைக்கு heater போடுற பிஸி.

//சூடாகின இருக்கு நம்ம நாட்டு வைத்தியங்கள் //
இருக்கே .. தேவை ஏற்படின் பார்சல் சர்வீஸ் இல அனுப்பி விட்டா போச்சு. அண்ணலுக்கு இந்த .....ஜியின் அருள்/ஆசி/ உதவி என்றும் இருக்கு

வேணும் என்றால் local aaவே ஒரு மடம் திறந்து வைச்சா போச்சு!!!

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
நீண்ட நாள் சந்தேகம் ட்விட்டர் என்றால் என்ன?//

ஐயோ அம்மா உலக நடிப்படா சாமி..

breaking news...
கமல் ஒஸ்கார் விருது வாங்குமுன் அவரது பரம ரசிகர் வந்தியத்தேவன் ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்.. ;)

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள் said...
ஏதோ நம்ம பக்த கோடிகளின் புண்ணியத்தால் மடம் நல்லா ஓடிட்டு இருக்கு.
குளிர் காலம் வருது கோடினிகள் எல்லாம் அவதி படுவாங்கள் என்று அறைக்கு heater போடுற பிஸி.
//

ம்ம் நடக்கட்டும்.. நடக்கட்டும். உங்கள் குரு பிரேமானந்தா மாதிரி ஆகாமலிருந்தால் சரி.. ;)

//சூடாகின இருக்கு நம்ம நாட்டு வைத்தியங்கள் //
இருக்கே .. தேவை ஏற்படின் பார்சல் சர்வீஸ் இல அனுப்பி விட்டா போச்சு. அண்ணலுக்கு இந்த .....ஜியின் அருள்/ஆசி/ உதவி என்றும் இருக்கு

வேணும் என்றால் local aaவே ஒரு மடம் திறந்து வைச்சா போச்சு!!!

//

உங்கள் ஆசிகள் மட்டுமே போதும் சாமி.. வேறு எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.. நான் குடும்பஸ்தன்..

யோ வொய்ஸ் (யோகா) said...

வந்தியும் லோஷனும் இங்கேயே டிவிட்டுறாங்களோ? ஆனால் மல்லிகா அக்கா படம் போடாததனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. எப்படியும் லோஷன அவங்க கிட்ட போட்டு கொடுத்திர வேண்டியது தான்.

வேந்தன் said...

//LOSHAN said...
இந்த சிங்கம் STEADYஆன சிங்கம்//
நம்பிட்டோம் :)
எனக்கு இந்த நயன்தாராவின் சிங்கத்தின் வால் பார்க்க ஆசையாக இருக்கு, அப்படி படம் ஏதாவது இருக்கா?

வந்தியத்தேவன் said...

லோஷன் லோக்கல் பாசையில் சிங்கம் என்றால் என்னவென்பது தெரியும் தானே. Is there Lion in You?

ARV Loshan said...

யோ வாய்ஸ் said...
வந்தியும் லோஷனும் இங்கேயே டிவிட்டுறாங்களோ? ஆனால் மல்லிகா அக்கா படம் போடாததனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. எப்படியும் லோஷன அவங்க கிட்ட போட்டு கொடுத்திர வேண்டியது தான்.//

வந்திட்டாரய்யா மல்லிகா அடிகளார்.. ;)
அங்கே பதிவதும், இங்கே ட்விட்டுவதும் சகஜம் தானே.. ;)

ARV Loshan said...

வேந்தன் said...
//LOSHAN said...
இந்த சிங்கம் STEADYஆன சிங்கம்//
நம்பிட்டோம் :)//

உண்மை அதானே.. ;)


எனக்கு இந்த நயன்தாராவின் சிங்கத்தின் வால் பார்க்க ஆசையாக இருக்கு, அப்படி படம் ஏதாவது இருக்கா?//

இது கொஞ்சம் ஓவர் தான்.. பரவாயில்லை.. நாடுங்கள் இன்றே வந்தியை.. வந்தி, அப்படிப் படம் ஏதாவது இருக்கோ?

ப்ரியா பக்கங்கள் said...

ரொம்ப பயப்பிடுறீங்க போல .. நாங்க offline இல வைச்சு இதை டீல் பண்ணுவம்.
நயநமே ஸ்வாகா
ஓம் க்ரீம் அசின் னாய
ஓம் க்ரீம் தமனாவாக
ஓம் க்ரீம் ஸ்ரேயவாக
நயநமே ஸ்வாகா!!!

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
லோஷன் லோக்கல் பாசையில் சிங்கம் என்றால் என்னவென்பது தெரியும் தானே.
Is there Lion in You?//

அப்பிடின்னா என்னாங்க? புரியலையே.. ;)
நீங்க தான் இதையும் சொல்லித் தரனும்

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள் said...
ரொம்ப பயப்பிடுறீங்க போல .. நாங்க offline இல வைச்சு இதை டீல் பண்ணுவம்.//

விளங்கினா சரி.. சுவாமியின் ஞான திருஷ்டியே தனி.. ;)


நயநமே ஸ்வாகா
ஓம் க்ரீம் அசின் னாய
ஓம் க்ரீம் தமனாவாக
ஓம் க்ரீம் ஸ்ரேயவாக
நயநமே ஸ்வாகா!!!//

சுவாமி அபசாரம்.. நமீ தேவதா நமக விட்டுட்டீங்களே.. ;)

வந்தியத்தேவன் said...

//LOSHAN said...
அப்பிடின்னா என்னாங்க? புரியலையே.. ;)
நீங்க தான் இதையும் சொல்லித் தரனும்//

எனக்கும் தெரியாது ஆனால் நண்பர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். லயன் என்பது இலங்கையின் பிரபலமான பியர். பொதுவாக நண்பர்கள் இண்டைக்கு நாலு சிங்கம் உள்ளே போனால்தான் அலுப்புத் தீரும் என்பார்கள். இங்கே நாலு சிங்கம் என்பது நாலு போத்தல் லயன் பியர்.

நீங்கள் சிங்கத்தைவிட பெரிசுபோல இருக்கிறது.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சிங்கம் பாப்போம் சிங்கம் பாப்போம் வாடா சோம்பேறி...

சிங்கம் பாக்கப் பயம் எனக்கு போடா வரமாட்டேன்...

அங்கச் சிங்கம் தங்கம் தங்கம் வாடா சோம்பேறி...

அந்தச் சிங்கம் அங்கம் சூடாக்கும் போடா வரமாட்டேன்...

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//LOSHAN said...
அப்பிடின்னா என்னாங்க? புரியலையே.. ;)
நீங்க தான் இதையும் சொல்லித் தரனும்//

எனக்கும் தெரியாது ஆனால் நண்பர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். லயன் என்பது இலங்கையின் பிரபலமான பியர். பொதுவாக நண்பர்கள் இண்டைக்கு நாலு சிங்கம் உள்ளே போனால்தான் அலுப்புத் தீரும் என்பார்கள். இங்கே நாலு சிங்கம் என்பது நாலு போத்தல் லயன் பியர்.//

ஒ அப்பிடியா? உங்களிடம் நிறைய விஷயம் குடிக்க சாரி படிக்கவேண்டும் போலத் தான் கிடக்கு.. ;)

//நீங்கள் சிங்கத்தைவிட பெரிசுபோல இருக்கிறது//

நாங்கள் அப்பாவி சிங்கங்கள்..

ARV Loshan said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
சிங்கம் பாப்போம் சிங்கம் பாப்போம் வாடா சோம்பேறி...

சிங்கம் பாக்கப் பயம் எனக்கு போடா வரமாட்டேன்...

அங்கச் சிங்கம் தங்கம் தங்கம் வாடா சோம்பேறி...

அந்தச் சிங்கம் அங்கம் சூடாக்கும் போடா வரமாட்டேன்...
//

ஆகா என்ன ஒரு தன்னடக்கம்.. உங்களை நீங்களே அழைத்துப் பாடியது அருமை.. வியந்தேன் உங்கள் கவித்திறமை.. :)

கம்பஸில் உங்கள் card பெயர் சோ... என்று உங்கள் நண்பர்கள் சொன்னபோது முதலில் நான் நம்பவில்லை.. ;)

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்.. சிங்கம் நல்ல இடத்திலதான் இருக்கு

ப்ரியா பக்கங்கள் said...

சுவாமியின் ஞான திருஷ்டியே தனி.. ;)//

இது இருக்கிறதால தானே இன்று வரை எத்தனையோ கோடினிகள் என் மடத்தில் வந்து தனி தனியே ஆசிவாதம் பெற்று செல்கிறார்கள்.

தாங்கள் கூட ஒரு கோடினி ஆசிவாதம் பெற துயில் நிலையில் இருக்கும் போது எடுத்த திருட்டு நிழல் படத்தை பார்த்து ஆனந்தம் அடைந்து இருப்பீங்கள். :)

புது வரவுகள் 'சுவாமிகளை விரட்டுது' அதுதான் 'பழசுகளை'(பாவனையில்) தூக்கி எறிஞ்சாச்சு இங்கையும்!!

புல்லட் said...

ஆனால் அந்த சிங்கம் மொழுமொழு மாம்பழம் சாப்பிடதென்பது மட்டும் தெட்ட தெளிவாக தெரிகிறது...

இல்ல நான் ஒரு புஸ்தகத்தில படிச்சேன்.. சிங்கம் மாம்பழம் சாப்பிடாதெண்டு ... வேற ஒண்ணுமில்ல..

;)

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

எனக்கு புரியல்ல நயந்தாரவுக்காக இதை கமெண்ட் வந்ததா? இல்ல லோஷன் அண்ணாவின் தலைப்புக்காக இத்தனை கமெண்ட் வந்ததா? எப்படியோ நயன்தாராவை (..)சிங்கமாக்கிட்டிங்க. ( அடுத்த கிசுகிசு செய்திக்கு ஆயத்தமாகிரிங்க்களோ??)

வேந்தன் said...

//புல்லட் said...
இல்ல நான் ஒரு புஸ்தகத்தில படிச்சேன்.. சிங்கம் மாம்பழம் சாப்பிடாதெண்டு ... //
எந்த புத்தகம் புல்லட்? நான் ஒரு புத்தகத்தில் சிங்கம் "பப்பாளி பழம்" சாப்பிட்டது எண்டு படிச்ச நினைவு. புத்தகதின் பெயர் என்னமோ "மலையடிவார சிங்கங்களின் உணவுப் பழக்கங்கள்"

Unknown said...

இலங்கை வானொலி அல்லது உங்கள் வானொலி பற்றி ஏதேனும் ஒரு தகவல் ?.

ஏன் எப்.எம் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் செல்வதில்லை. அந்த காலத்தில் இலங்கை வானொலி தமிழ் நாட்டில் மத்திய அலை, சிற்றலைகளில் வெகு பிரசித்தம்.

ஆனால் எப்.எம் வரவுக்குப் பின்னால் இலங்கை வானொலி காணாமல் அதாவது தமிழ் நாட்டின் உட்பகுதிகளில் இல்லாமல் போய் விட்டதே ?

சில நாட்களுக்கு முன்னால் நாம் கேள்விப்பட்டோம் ,இலங்கையின் மிக உயரமான மலையின் மீது ரூபவாஹினி டவர் அமைப்பதாக உண்மையா ?

எப்.எம் தொலைதூரம் கேட்க வேண்டுமெனில் ஆகும் செலவு தொகை ஆகும் ,

இது நம்ம அறிவுக்கு மட்டுமே அதனால் தயங்காமல் கூறவும்.

நன்றீ ,

Unknown said...

அது எத்தனையோ வாழைப் பழங்களை தோலோடும் அடியோடும் முழுங்கிய சிங்கம்... கட்டாயம் தின்னும்

யோ வொய்ஸ் (யோகா) said...

வந்திட்டாரய்யா மல்லிகா அடிகளார்.. ;)
அங்கே பதிவதும், இங்கே ட்விட்டுவதும் சகஜம் தானே.. ;//

என்னை மல்லிகா அடிகளார் என கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தாங்கள் அப்படி கூறியதால் அசின், த்ரிஷா, ஸ்ரேயா எல்லாரும் கோவிச்சிகிட்டாங்க..

சி தயாளன் said...

ட்விட்டர் மாட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது போல...

:-))))

Sinthu said...

தலைப்பை வைத்து ஏமாத்திட்டீங்களே அண்ணா............
I have enjoyed it after long time..

Unknown said...

அந்த சிங்கத்துக்கு கொஞ்சம் கீழ ஒரு பூனையும் இருக்கு ... அத நானும் திருட்டுத்தனமா பார்த்திருக்கேன்(metacafe)...
அந்த பூனை சரத்குமார் முதல் கொண்டு பல பேரின் வாழைப் பழங்களை தின்னுள்ளது...

kuma36 said...

///பி.கு :- சிங்கப்பூர் சென்று திரும்பிய சிங்கம் வேறு - இந்த சிங்கம் வேறு//


கடைசியா சிங்கத்தை காட்டிங்க அண்ணா.

நயனோட சிங்கத்தை சொன்னேன்

ஆதிரை said...

//ட்விட்டர் மாட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது போல...

ம்ம்ம்...

சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறது என்னவென்று கண்டுகொண்டேன்

என்ன கொடும சார் said...

நயன்தாராவின் சிங்கம் என்று எல்லாரும் சொல்றீங்களே... அது எங்க இருக்கு?
(ஆத்திசூடி style இல் வாசிக்கவும்)

ஏதொ விவகாரம் போல இருக்கு.. Adults Only என்று அறிவித்தல் போட்டிருந்தால் இந்த பதிவுப்பக்கம் வந்திருக்க மாட்டேன்..

சரி சரி கதைக்கு வருவோம். எனக்கு விளங்கும் நீதி என்ன என்றால்.....
ஒருதடவை adjust பண்ணினா தொடர்ந்து adjust பண்ணவேண்டி வரும்.. கூச்சல் போட்டு சிங்கத்தின் வசதிகளை அனுபவிக்கும் குரங்குகள் எங்கும் உண்டு..

Anonymous said...

அவனவன் பன்னி காய்சல் வந்து பணால்னு போயிகிட்டு இருக்கான்... உங்களுக்கு நயன்தாராவோட சிங்கம் காய்ச்சல்... இந்த கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது... ம்...

thamizhi said...

வணக்கம், லோசன் அண்ணா..வவுனியாவில் இருக்கும் பொழுது சக்தி வானொலியில் உங்கள் குரலை எனக்கு பிடித்தது.உங்களுடன் சேர்த்து வாணி அக்காவும். எனக்கு உங்களை மாரி ஒரு அறிவிப்பாளராக வருவதற்கு ஆசை தான்.ஆனால், எனது சூழ்நிலைகள் காரணமாக நான் நிறைய படிக்கவில்லை.இலங்கையில் உயர்தரம் படித்தவுடன் எனது படிப்பு முடிந்து விட்டது..இன்னும் தொடர ஆசை தான்.என்னில் இருக்கும் குறை ஆங்கிலம் தெரியாது.எனக்கு 22 வயது அகிட்டுது. வருகின்ற வருடன் படிக்கலாம் என்றிருக்கிறன்.என்ன படிக்கணும் என்று வழிகாட்டுவீங்களா? நான் நித்யா. சொந்த இடம் முல்லைத்தீவு..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner