April 08, 2009

IPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா?


நேற்று பல பரபரப்பு நிகழ்வுகள் -

சில இணையத்தளங்களில் எரிந்த உடலங்கள் பார்த்து மனம் வெந்தது.

சிதம்பரம் மீதான செருப்படி தந்த கலவை உணர்வுகள்.

இந்திய கிரிக்கெட் அணியின் சரித்திரப்பூர்வ தொடர் வெற்றி

இவற்றுள் பின்னிரண்டு பற்றிப் பலரும் பதிவிட்டுவிட்டார்கள்

முதல் விஷயம் படங்களைப் பார்த்தவுடனேயே மனிதாபிமானமுள்ள மனம் பதறும்.

என் பதிவை நேற்றுப்பார்த்த இத்தனை நெஞ்சங்கள் பதறியபோது எனக்கே ஒரு மாதிரியாகப் போனது. 'உயிராபத்து' என்பதே அப்போது தான் புரிந்தது போல...

ஏனடா எழுதினோம் என்ற மாதிரி ஒரு சங்கடம்.. நான் கூட என்னைப் பற்றி இவ்வளவு அக்கறைப்பட மாட்டேன்..

சரி இதெல்லாத்தையும் விட்டிட்டு நம்ம ஏரியாவுக்குள் வரலாமே-

IPL கிரிக்கெட்டைப் பலிகடா ஆக்குகிறதா?


lOSHAN
IPL இன் ஏகப்பட்ட கெடுபிடிகள் காரணமாக மீண்டும் ஒரு தடவை பிரபலமான, முக்கியமான ஊடகநிறுவனங்கள் பல இவ்வாண்டு IPL ஐப் பகிஷ்கரிக்கப்போவதாக எச்சிரித்திருக்கின்றன. கடந்த ஆண்டும் இவ்வாறே IPL இலிருந்து இவை வெளிநடப்பு செய்திருந்தன.

கிரிக்கெட் பற்றிய பல இணையத்தளங்கள், பத்திரிகைள், தொலைக்காட்சிகளுக்கு IPL போட்டிகளின் புகைப்படங்கள், செய்திகளை வெளியிடுவதற்கு லலித் மோடி குழுவினர் விதித்த அதிக இறுக்கமான கட்டுப்பாடுகளே இந்தப் பகிஷ்கரிப்புக்கான காரணம்.

கடந்த வருடமும் இதேபோல The News Media Coalition என்ற அமைப்பே போர்க்கொடி தூக்கியிருந்தது. இந்த அமைப்பின் கீழ்தான் உலகின் பிரபல செய்தி ஏஜென்சிகளான Reuters, AFP, AP, Getty Images போன்றவை இயங்குகின்றன.

IPL நிறுவனத் தலைவர் லலித்மோடி ஒரே இணையத்தளத்துக்கே IPL T-20 போட்டிகளின் செய்திகளையும், படங்களையும் வழங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவோ அதில் மாற்றங்கள் செய்யவோ மறுத்துவிட்டார்.

கடந்த வருடம் இந்த ஏஜென்சிக்கள் போலவே இந்தியாவின் செய்தித்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் ஆரம்பத்தில் IPL போட்டிகளைப் பகிஷ்கரித்தும் பின்னர் அவற்றின் சில முக்கிய கோரிக்கைகளை IPL ஏற்பாட்டாளர்கள் ஏற்றதன் பின்னர் அவை IPL புகழ் பாட ஆரம்பித்ததும் நினைவுபடுத்தத்தக்கது.
தகவல் : CRICINFO

இப்போ கேள்வி என்னவென்றால் - அனுசரணையாளாகள், மில்லியன் கணக்கான பணம் என்பவற்றுக்கு முன்னால் கிரிக்கெட்டின் சகல தாற்பரியங்களும் அடிபட்டுப் போகப் போகின்றதா?

IPL வீரர்களுக்கான வரமாக இருந்தாலும் - கிரிக்கெட்டுக்கான சாபமாக மாறுகிறதா?

முதலில் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிய வீரர்கள் எல்லோரும் IPLஐயும் மில்லியன் டொலர்களையும் அதிகம் நேசிக்க, கிரிக்கெட்டின் கட்டுக்களே மாறிப்போய் - கிரிக்கெட் சபைகளே கேலிக்கூத்தாகிப் போகின.

கடந்த வருடம் போலவே இப்போது இந்த வருடமும் தகவல்கள் அறியும் உரிமைகளையும் Exclusive Rights என்ற பெயரில் மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சோனி மக்ஸ்க்கு தொலைக்காட்சி உரிமை வழங்கியாயிற்று.

வீரர்களைக் கொத்தடிமைகளாக franchisesக்கு விலை பேசியாயிற்று. (அவுஸ்திரேலிய வீரர்கள் தமது நாட்டிற்கும், ஆஷஸிற்கும் அளித்த முக்கியத்துவத்துக்காக உண்மையில் தலை வணங்குகின்றேன்.)

அந்தப் பணமும் தான் விலை கொடுத்து வாங்கிய அணியும், வீரர்களும், பயிற்றுவிப்பாளரும் இருக்கும் துணிவில் - உலகில் பலராலும் மதிக்கப்படும் ஒரு சிரேஷ்ட முன்னாள் வீரரான கவாஸ்கரையே 'வாயை மூடு' என்கிறார் சினிமா நட்சத்திரம் ஷாருக்கான்.


போகிற போக்கில் பணம் கொழிக்கும் விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட் பணத்தால் பிய்த்து தின்னப்படும் ஒரு ஆட்டமாக மாறப் போகிறது.. ஒரு கட்டத்தில் பந்தயக்காரர்களால் கிரிக்கெட் சீரழிகிறது என்று புலம்பியவர்கள் எல்லாரும் பண வியாபாரிகளிடம் கிரிக்கெட்டை விற்று விட்டார்களா?

TWENTY 20 வந்து டெஸ்ட்டையும்,ஒரு நாள் ஆட்டத்தையும் கொன்று விட பணமும்,அனுசரணை வியாபாரமும் IPLஇல் ஆரம்பித்து கிரிக்கெட்டை பலிஎடுக்கப் போகிறதா? மீட்சி எப்படி?




12 comments:

Unknown said...

{muthal point and your blog}
ivai kandu Naangalum Pathari ponom...
"aapathu" enbathu unamai thaan..


Others ; we dont much interested to comment

புல்லட் said...

சில இணையத்தளங்களில் எரிந்த உடலங்கள் பார்த்து மனம் வெந்தது. //
சீரியசா விளையாடிக்கிட்டிருக்கும் போது விளையாட்டில எவராவது அளாப்பினா கடும் எரிச்சல் வருவது உண்மைதானே? ஆனா கிரௌண்டுக்கு சொந்தக்காரன்ட மகன் அளாப்பினா பொத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்..ம்ம்!
உணர்ச்சி வசப்படல் உடம்புக்காகாது... :)

கிட்டடில மூண்டு 130மிமி கிடைச்சதாம்... ஒண்ட எனக்கு தரும்படி கேட்டிருக்கன்.. இங்க ஒராள் கிரிக்கட்டு கிட்டிப்புள்ளெண்டு அடிக்கடி மண்டய காய வைக்குது.. வீட்டு வாசலில வைச்சு வெளில வரும்போது அடிக்கப்போறன்.. :D

அதுசரி இரவு எங்க அப்பாவோட நடை பயணமா போனீங்கள்... அதுவும் உள்ளாடையோட? ;)

தலைதப்பினதுககு KFC ல பாட்டியோ?ஒரு மனர்சு க்காக தன்னும் என்ன கூப்பிடேல்லதானே போங்க! :(

ARV Loshan said...

Priyatheepa said...
{muthal point and your blog}
ivai kandu Naangalum Pathari ponom...
"aapathu" enbathu unamai thaan..//
தான் ஆடாவிட்டாலும் தசை இல்லையா.. அது தான்..


//Others ; we dont much interested to comment//
ok ok.. but சப்பாத்து வீச்சு கூடவா?

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
சில இணையத்தளங்களில் எரிந்த உடலங்கள் பார்த்து மனம் வெந்தது. //
சீரியசா விளையாடிக்கிட்டிருக்கும் போது விளையாட்டில எவராவது அளாப்பினா கடும் எரிச்சல் வருவது உண்மைதானே? ஆனா கிரௌண்டுக்கு சொந்தக்காரன்ட மகன் அளாப்பினா பொத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்..ம்ம்!//

அது சரி தான்.. அதுவும் மத்த அணி அளாப்புது எண்டு சொல்லிக் கொண்டே.. ஆனா கிரௌண்டுக்கு சொந்தக்காரன்? புல்லட் எந்த கிரௌண்ட் யாருக்கு சொந்தம்? நல்ல கதை.. (ஆனால் இப்ப தான் எல்லாம் போச்சே..)


//உணர்ச்சி வசப்படல் உடம்புக்காகாது... :)//
mmmm


//கிட்டடில மூண்டு 130மிமி கிடைச்சதாம்... ஒண்ட எனக்கு தரும்படி கேட்டிருக்கன்.. இங்க ஒராள் கிரிக்கட்டு கிட்டிப்புள்ளெண்டு அடிக்கடி மண்டய காய வைக்குது.. வீட்டு வாசலில வைச்சு வெளில வரும்போது அடிக்கப்போறன்.. :D//

இப்பிடி வெருட்டினா உண்மையில யாரிட்டையாவது போட்டுக் குடுத்து விட்ட்ருவன்.. இவர் அடிக்கடி 130மிமி பற்றிக் கதைக்கிறார்.. பெயர் வேற புல்லட் என்று ஆயுதப் பெயரா வச்சிருக்கிறார்.. அப்பிடி இப்பிடி என்று தீட்டி விடுவன் தீட்டி.. கவனம்..

//அதுசரி இரவு எங்க அப்பாவோட நடை பயணமா போனீங்கள்... அதுவும் உள்ளாடையோட? ;)//

அடப் பாவி புல்லட்.. வாசிக்கிறவங்க யாராவது தப்பா நினைக்கப் போறாங்க.. அது சோர்ட்ஸ்/jumper.. ஹையோ ஹையோ.. இந்த சாரம் கட்டிரவங்களோட ஒரே கரைச்சலாப் போச்சு..

//தலைதப்பினதுககு KFC ல பாட்டியோ?ஒரு மனர்சு க்காக தன்னும் என்ன கூப்பிடேல்லதானே போங்க! :(//

நானே சிக்கிட்டாண்டா அடிமை எண்டு ஒராளைப் பிடிச்சு KFC போய் ஓசீல சாப்பிடுறன் இவரை வேற கூப்பிடனுமாம்..

அடப்பாவி எனக்கு உண்மையில பயமாக் கிடக்கு.. ஒரு பக்கம் ஆதிரை.. இன்னொரு பக்கம் புல்லட்.. என்னை தொடர்ந்து எனக்குத் தெரியாமலே கண்கானிக்கிராங்கப்பா..

யாரப்பா நீங்க? எங்க இருக்கிறீங்க?

ஆதிரை said...

//சில இணையத்தளங்களில் எரிந்த உடலங்கள் பார்த்து மனம் வெந்தது.

சில கேள்விகள் அல்ல... பல கேள்விகள் எங்களுக்குள் எழுகின்றன. ஆனாலும், அடிமையாகிவிட்டோம் இங்கே... அதனால் பொத்திக்கொண்டிருக்கின்றோம்.



//கிரௌண்டுக்கு சொந்தக்காரன்ட மகன் அளாப்பினா பொத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்

காவியொன்று சொல்கின்றது ராஜரட்டைக்கு முதல் அங்கேயும் தாங்கள் கோலோச்சினமாம்.
யாரிடம் சொல்லி அழ... :(



//சிதம்பரம் மீதான செருப்படி தந்த கலவை உணர்வுகள்.

இன்று உங்களின் காலை நிகழ்ச்சியும் இதையொட்டியே நடந்தது. ஆனால், அதை முற்றாக கேட்கமுடியவில்லை. அதில் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து ஒரு பதிவு இடமுடிந்தால் நல்லது.
என்னைப் பொறுத்தவரை, இன்னொரு முறை மனது சந்தோசப்பட்டது. ஏனெனில், அடி வாங்கியவர் ஒரு இந்தியன் என்பதால்... (தமிழ்நாடே மன்னிக்க என் மனதை...:( )


//போகிற போக்கில் பணம் கொழிக்கும் விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட் பணத்தால் பிய்த்து தின்னப்படும் ஒரு ஆட்டமாக மாறப் போகிறது...

அதே சந்தேகம் எனக்குள்ளும்... நடிகர் ஒருத்தர் கிரிக்கட் வீரரைப் பார்த்து 'இயலுமானால் ஒரு அணியை வாங்கிப் பார்' எனும் சவால் விடுகின்ற நிலையில் இன்றைய கிரிக்கட்.


//யாரப்பா நீங்க? எங்க இருக்கிறீங்க?
கூப்பிடு தூரத்தில் தான்... :)

Unknown said...

புரிந்து கொண்டார்... தெரிந்து கொண்டார்...

அர்ஜீன ரணதுங்க IPL ஐ எதிர்த்ததற்கு காரணம் புரிந்ததா...???

King Viswa said...

லோஷன்,

ஷா ருக் கானின் பார்வையில் அவர் செய்வது சரியாக இருக்கும்.(இப்போதைக்கு அவற்கு ஈகோ அவரின் யோசிக்கும் திறமையை மறைத்து விட்டது - பின்னே யார்தான் "தம்பி, உன்னை நல்ல ஏமாத்துறான் அவன், அவனோட சொந்தக்காரங்களுக்கு எல்லாம் வேலை வங்கி குடுத்துட்டன் உன்னோட காசுல" என்று சொன்னால் அதை உலகப் பார்வையில் ஒப்புக் கொள்ள முடியும்? தனியே அழுதாலும் வெளியுலகில் காட்டிக் கொள்ள முடியாதல்லவா?)

//TWENTY 20 வந்து டெஸ்ட்டையும்,ஒரு நாள் ஆட்டத்தையும் கொன்று விட பணமும்,அனுசரணை வியாபாரமும் IPLஇல் ஆரம்பித்து கிரிக்கெட்டை பலிஎடுக்கப் போகிறதா? மீட்சி எப்படி?// இந்த அலை - சுழற்சி முடியும் போது மறுபடியும் டெஸ்ட் போட்டிகளில் வந்து நிற்பார்கள்.

சமீப ஆசி-தென் ஆபிரிக்க டெஸ்ட் போட்டிகள், இந்திய - ஆசி டெஸ்ட் போட்டிகள் என டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக தான் சென்றுக் கொண்டு இருக்கிறது. அதனால் கவலை இல்லை. (மூன்று அணிகளை தவிர மற்ற அணிகள் பலவீனமாக இருப்பது நீண்ட கால அளவில் நல்லதுக்கு இல்லை)

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்

என்ன கொடும சார் said...

பாரினில் சிறந்த தேசம் - எங்கள் இலங்கை தேசம்

யுத்த அபாயச்சூழல் இந்தியாவின் 95% ஆன பகுதிகளில் இல்லை. இருந்தாலும் மத்திய கிழக்கிற்கு தொழில் செய்யச்செல்லும் இந்தியன் அடித்து துரத்தினாலும் இந்தியாவுக்கு திரும்ப மனமின்றி இருக்கும் நிலையில்

Anonymous said...

Requesting your opinion about பூச்சரம்

Poosaram.blogspot.com

Anonymous said...

close the latest online [url=http://freecasinogames2010.webs.com]casino games[/url]. vs the all up to date [url=http://www.realcazinoz.com/]casino games[/url] guide. looking to [url=http://www.avi.vg/]sex[/url] ? or up to old hat modern [url=http://bestcasinos.webs.com/]casino games[/url] ? [url=http://www.realcazinoz.com/amex-casinos.htm]Amex Casino[/url] . infrequent more [url=http://gravatar.com/amexcasinos]amex casino[/url] sites.
[url=http://freecasinogames2010.webs.com/onlineblackjack.htm]online blackjack[/url] .

Anonymous said...

Good point, though sometimes it's hard to arrive to definite conclusions

Anonymous said...

Hi - I am certainly glad to discover this. great job!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner