February 26, 2009

தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று காலையில் கிடைத்த அதிர்ச்சியான,அச்சம் தரும் தகவல் ...  

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரும்,'சுடரொளி'பத்திரிகையின் பொது முகாமையாளராகவும்,ஆசிரியராகவும் இருந்து துணிச்சலாக செய்திகள்,கட்டுரைகள் தந்து கொண்டிருந்தவருமான வித்தியாதரன் கடத்தப் பட்டுள்ளார் என்ற செய்தி தான் அது. கொழும்பு,கல்கிஸ்ஸையில் மரணவீடொன்றுக்கு சென்று திரும்பும் வேளையில் இவரை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோர் பலவந்தமாக,பலர் பார்க்கும் வேளையில் கடத்தி சென்றுள்ளதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.  

அண்மைக்காலத்திலும் துணிச்சலாகவும்,உண்மையாகவும் பல சம்பவங்களையும்,நாட்டு நடப்புக்களையும் ஆசிரியத் தலையங்கமாகவும்,கட்டுரைகளாகவும் எழுதி வந்தவர் 'வித்தி' எனப்படும் வித்தியாதரன் என்பது குறிப்பிடத் தக்கது.  

தமிழ் ஊடகத் துறைக்கு மற்றுமொரு பகிரங்க மிரட்டல்..  

வித்தி பத்திரமாக திரும்ப பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் எங்களால் செய்ய முடியாத நிலை.

பின்னர் கிடைத்த செய்தியின் படி காவல்துறைப் பேச்சாளர் அவர் கடத்தப்படவில்லை எனவும்,கைது செய்யப்பட்டார் எனவும், தாங்கள் வித்தியாதரனைக் கைது செய்தது விசாரணைக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை ஊடகத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.


12 comments:

ஆதிரை said...

:(
உரக்கக் கூவி உங்களை அழைக்கின்றோம். பத்திரமாகத் திரும்பி வருவீர்களா???

இறக்குவானை நிர்ஷன் said...

சம்பவத்தை சம்பவமாக மட்டும் எழுதும் ஊடகவியலாளர்களுக்கிடையில் சம்பவங்களை விமர்சனக்கண்ணோட்டத்தோடு துணிச்சலுடன் எழுதிவருபவர் வித்தியாதரன். தமிழ் ஊடகவியலாளர்களில் மிகச்சிறந்த எழுத்தாளரும் படைப்பாளரும் கடத்தப்பட்டசெய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது.

பதிவிட்டிருக்கிறேன்.

பிரார்த்தனைகள் பலிக்கும் என்ற எண்ணத்தில் தான் நானும் இருக்கிறேன் லோஷன்.

தமிழ் மதுரம் said...

லோசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வித்தியாதரன் இணையத்தளங்களை மேற்கோள் காட்டி வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தமைக்காக எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது...

மீண்டும் மீண்டு வரப் பிரார்திப்போம்...!

Vathees Varunan said...

அதிர்ச்சியான செய்திததான்
பத்திரமாக திரும்பி வர பிரார்திப்போம்

ARV Loshan said...

இப்போது கிடைத்த செய்தியின் படி காவல்துறைப் பேச்சாளர் அவர் கடத்தப்படவில்லை எனவும்,கைது செய்யப்பட்டார் எனவும், தாங்கள் வித்தியாதரனைக் கைது செய்தது விசாரணைக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை ஊடகத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆதிரை said...

Updated @ 26/02/2009 10:23 AM
Chief Editor of the Sudar Oli, a Tamil daily, N. Vidyatharan has been abducted in Mount Lavinia by an armed group a short while ago while attending a function , the police said.

Updated @ 26/02/2009 12:20 PM
Police are now saying that Sudar Oli editor N. Vidyatharan was not abducted by an unknown group but was in fact taken in for questioning by police - Police Spokesman.

thanks : DailyMirror

இறக்குவானை நிர்ஷன் said...

பொலிஸார் கைது செய்யும்போது எதற்காக கைது செய்கிறோம் என்பது அறியப்படுத்தப்படவேண்டும் என்றும் உறவினர்களுக்கு அறிவித்தல் விடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தில் இருக்கிறது.

மக்களுக்காக குரல்கொடுக்கும் வித்தியாதரன் பயத்தில் அடங்கிவிடுவார் என நான் நம்பவில்லை. அவர் நமக்கான சொத்து.

இந்நிலையில் யாரை ஏமாற்ற முனைகிறார்கள் இவர்கள்?

இது குறித்த செய்திகள் வெளியிடும்போது கவனமாக இருங்கள் லோஷன்.

குருபரன் அண்ணா கடத்தப்பட்ட வேளை ஆர்ப்பாட்டம் செய்தோம் நினைவிருக்கிறதா? அவ்வேளை கோபம் கொண்டிருந்த நாம் வீதியை இடைமறித்து அங்கு உட்கார முற்படுகையில் , நம்மை ஒரு வீடியோ கமரா கவனித்துக்கொண்டிருக்கிறது எனக்கூறி போத்தல நம்மை அழைத்துச்சென்றார். அதேபோன்று ஊடகவியலாளர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களில் பலர் பல விதங்களில் தகவல் தேடுகிறார்கள்.

உங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Gajen said...

லோஷன் அண்ணா,

நான் அண்மைக்காலமாக அவதானித்த ஒரு விடயம்...யார் எவ்வளவு தான் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் யாரும் மசிற மாரி இல்ல..அவன் அவனுக்கு அவன் அவன்ட வேல.. என்ன எழுதினாலும் விமர்சித்தாலும் இந்த நிலம சரி வரப் போறதில்ல என்டு நினைக்கிறன்.

Gajen said...

லோஷன் அண்ணா,

நான் அண்மைக்காலமாக அவதானித்த ஒரு விடயம்...யார் எவ்வளவு தான் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் யாரும் மசிற மாரி இல்ல..அவன் அவனுக்கு அவன் அவன்ட வேல.. என்ன எழுதினாலும் விமர்சித்தாலும் இந்த நிலம சரி வரப் போறதில்ல என்டு நினைக்கிறன்.

Gajen said...

லோஷன் அண்ணா,

நான் அண்மைக்காலமாக அவதானித்த ஒரு விடயம்...யார் எவ்வளவு தான் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் யாரும் மசிற மாரி இல்ல..அவன் அவனுக்கு அவன் அவன்ட வேல.. என்ன எழுதினாலும் விமர்சித்தாலும் இந்த நிலம சரி வரப் போறதில்ல என்டு நினைக்கிறன்.

ஆ! இதழ்கள் said...

:(


இது குறித்த செய்திகள் வெளியிடும்போது கவனமாக இருங்கள் லோஷன்.

:(((

பிரார்த்தனை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை

சி தயாளன் said...

ம்..கவலைக்குரிய செய்தி..:-(

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner