உங்கள் பிரார்த்தனைகள்,வேண்டுதல்கள்,அன்பு,அக்கறை,ஆதங்கம்,ஆவேசம்,உண்மையான கவலை என்று அனைத்தின் பயனாகவும்,எனது குடும்பத்தாரினதும்,நண்பர்களினதும் இடைவிடாத முயற்சிகளினாலும் இன்று பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரினால் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட்டு,குற்றங்கள் ,சந்தேகங்கள் எதுவுமற்று நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.
வீட்டுக்கும்,எனது உறவுகளுக்கும் தொலைபேசி மூலமாக ஆறுதல் அளித்து வந்த சொந்தங்கள்,நட்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
முகம் தெரியாத ஏராளமான அன்புள்ளங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டு பதிவுகள் இட்டமைக்கும்,கவலைப் பட்டுப் பதிவுகள் இட்டமைக்கும் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ???
இன்று பிற்பகல் வீடு வந்து நண்பர்களின் அழைப்புக்கள்,உறவினர்களின் நலன் விசாரிப்புக்களுக்குப் பிறகு பத்திரிகை செய்திகளையும்,இணையத்தின் செய்திகளையும் பார்த்தவுடன் உண்மையில் நன்றிகளோடு ஆச்சரியப்பட்டுப் போனேன், விதமாக எத்தனை பேர் எனக்காக,ஒரு ஊடகவியலாலனுக்காக கவலைப்பட்டுக் குரல் எழுப்பியுள்ளார்கள் என்று.
அனைவருக்கும் நன்றிகள் என்ற உன்னத வார்த்தையைத் தவிர இப்போதைக்குத் தர ஏதுமில்லை என்னிடம்..
எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.
தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..
இந்தவேளையில் மட்டுமல்ல என் வாழ்வின் எந்த வேளையிலும் உங்கள் எல்லோரையும்,என் குடும்பத்தாருக்கும் என் விடுதலைக்கும் உதவிய என்னுயிர் நண்பர்களையும் நான் நினைந்திருப்பேன்.
135 comments:
வாழ்த்துக்கள் அண்ணா....!
தொடரட்டும் உங்கள் பணி...
rilanka so that thayy are arresting. what thay will do with others.srilankan governmant is thinking thay can put all world people in jail?inform them to change their mind.otherwise world people make them change.
வாழ்த்துக்கள் லோஷன்.
good to know you are ok. best wishes
All the best LOSHAN
காலையிலே நண்பர் ஒருவரின் பதிவை பார்த்து தூயாவிடம் கேட்டருந்தேன். நிம்மதியா இருக்கு சகா.
//முகம் தெரியாத ஏராளமான அன்புள்ளங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டு பதிவுகள் இட்டமைக்கும்,கவலைப் பட்டுப் பதிவுகள் இட்டமைக்கும் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ???//
நன்பர்களாகவும், சக பதிவரகளாகவும் இது எங்கள் கடமை.
//தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..//
நடந்ததை பற்றி எழுதும்போது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். குழந்தை நலமா?
//எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.//
இதைப் படிக்கையில் மகிழ்வாய் உணர்கிறோம்.
எங்களை விடுங்கள்.. உங்கள் வலைப்பூவில் உள்ள உங்கள் குழந்தையின் படத்தைப் பார்க்கையில் எல்லாம், அவனது தவிப்பை நினைத்துதான் வேதனையடைந்துபோனோம். அவனது அன்பு வென்றது.
இது குறித்து உங்கள் அனுபவப் பதிவை எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். இப்போதைக்கு உங்கள் குடும்பத்தாருக்கு நேரம் ஒதுக்குங்கள். இது எல்லாப் பதிவர்கள் சார்பாகவும் எனது வேண்டுகோள்.
அன்பும், வாழ்த்துக்களும்.
-கிருஷ்ணா
எந்தவிதமான பாதிப்புக்களும் அன்றி நீங்கள் திரும்ப வந்ததற்கு வாழ்த்துக்கள்..!!!!!
தொடரட்டும் உங்கள் சீரிய பணி...!!!!
வாழ்த்துக்கள் லோஷன்!
இந்தப் பதிவை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் வந்துபோனது வீண்போகவில்லை.
(விரிவாக) எழுதும் போது யோசிச்சு எழுதுங்க..
வேற என்னத்தைச் சொல்ல...
வேதனையிலும் நம்பிக்கையோடு இருந்தோம்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் லோஷன்.
தொடரட்டும் உங்கள் பணி...
//எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்//
நல்லது :)
welcome back loshan
அண்ணா நீங்கள் வந்தது எங்கள் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் காத்திருக்கிறோம்,,,,,,,,
வாழ்த்துக்கள் லோஷன்....!
தொடரட்டும் உங்கள் பணி...
மகிழ்ச்சி!
அன்பு நண்பா
நீ கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று மதியம் வரை உன்னைப் பற்றிய செய்திகள் பயத்தை ஏற்படுத்தினாலும் நிச்சயம் ஒன்றும் நடக்காது என மனதில் தோன்றியது, தமிழக உறவுகளும் ஏனைய உறவுகளும் உங்களைத் தேடும் போது இலங்கையில் இருக்கும் நாம் ஏதும் செய்யமுடியாத நிலை. உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன். சிறையில் தொந்தரவு இல்லாவிட்டாலும் தனிமை எவ்வளவு கொடுமை என்பது அனைவருக்கும் புரியும்.
தடைகளை உடைத்து வெற்றி நடைபோட மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்பின் லோஷன்,
மீண்டும் உங்கள் பதிவினைப் பார்க்க மிகவும் மகிழ்வாக இருக்கிறது நண்பரே..
தொடர்ந்து எழுதுங்கள் !
நீங்கள் மீண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி, அதேபோல ஈழத்தமிழ் மக்களும் பேரினவாதக் கொடுமையிலிருந்து விடுதலையடைய விருப்பம்
வினவு
மிக்க மகிழ்ச்சி லோசன் !!!
வழக்கம் போல உங்கள் பணி தொடரட்டும் !!!
மட்டற்ற மகிழ்ச்சி!
மிக்க மகிழ்ச்சி அன்பரே, தங்கள் குடும்பத்தினருடன் தாங்கள் இன்புற்றிருக்க எனது வாழ்த்துகள்..
லோசன், மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் லோஷன். தொடருங்கள் பணியை.
//ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்//
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி!
Thanks dear...
-- Kuzhali
Welcome back Loshan,I always thought about your son.I hope this
experience will give you more courage and will to face any trouble in life.Best Wishes.
வாழ்த்துக்கள் அண்ணா, அன்று குருபரன் அண்ணாவும் வெளியே வந்து இப்படித்தான் சொன்னவர்,உங்களை போன்று இனப்பற்று மிக்கவர் குரல்கள் நசுக்கபட்டது எம்மவர்க்கு ஒன்றும் புதிதல்லவே, கவனம் அண்ணா
வாழ்த்துக்கள்!!!
தொடரட்டும் உங்கள் பணி
எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள் அண்ணா! ஓயாது உங்கள் பணியைத் தொடருங்கள் அண்ணா!
மகிழ்ச்சி நண்பரே!
Happy to see u again anna. Dushy
வருத்தமான உங்கள் கைது செய்திக்கு பின்னர் இன்று ஒரு மகிழ்வான செய்தி.
"மீண்டும்" என்பதை விட "மீண்டு" என்பதுதான் சரி.
வணக்கம் நண்பா!
மீண்டது மகிழ்ச்சி. எத்துனை இடர் வரினும் எம்மக்களின் எழுச்சி என்றுமே முக்கியம். மனதில் கொள்ளுங்கள் நண்பா. எமக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். வானொலிக்கு எப்பொழுது வருவீர்கள்.
Glad to see ur back.......loshan anna........
u were released very safely....very happy & relax.
we should thank god for that......
eager 2 know abt ur alone days in there........
CONGRATS!! LOSHAN ANNA...
feel free & keep rocking......
expecting ur voice back in vettri..FM....
tc...
Glad to see ur back.......loshan anna........
u were released very safely....very happy & relax.
we should thank god for that......
eager 2 know abt ur alone days in there........
CONGRATS!! LOSHAN ANNA...
feel free & keep rocking......
expecting ur voice back in vettri..FM....
tc...
மகிழ்ச்சி நண்பரே, வாழ்த்துக்கள்
-
தொடநருங்கள் உங்கள் பனி
மிகுந்த மகிழ்ச்சி லோஷன்! உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் லோஷன்......
தொடரட்டும் உங்கள் பணி...
அன்புள்ள லோஷன்,
இந்தியாவின் திருநெல்வேலியிலிருந்து
ஹெல்த்கேர் ராஜா எழுதிக் கொள்வது,
தங்கள் கைது.......
தங்கள் விடுதலை.....
தர்மம்தனை சூது கவ்வும்...இறுதியில்
தர்மமே வெல்லும்.
இது தான் நடந்து உள்ளது.
லோசன் !
நீங்கள் கைது செய்யப்பட்டபோது இன்னுமொரு தமிழ் உணர்வாளரின் வாழ்வின் பெரும்பகுதியை நான்கு சுவருக்குள் கழிக்க வைத்துவிடுவார்களோ என பயந்து விட்டேன். நல்லபடியாக திரும்பி வந்தது மகிழ்ச்சி. ஊடகவியளாளர் குருபரன் அண்ணை போல் ஒதுங்கி விடுவீர்களோ என்று நினைக்கும்போது சற்று கவலையாக இருக்கின்றது. இருந்தாலும் அது தவிர்க்கமுடியாதென்னும் போது என்ன செய்யமுடியும். இப்போதைய உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என எனக்கு தெரியும் (அனுபவம்). ஆகவே முடிந்தளவு பழையதை நினைக்காமல் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
குறிப்பு.
நீங்கள் கைதான பின்புதான் உங்களுடைய வலைப்பதிவை முதன் முதலாக பார்த்தேன். தொடர்ந்து பார்க்க தூண்டியது. கஞ்சா சாப்பிடுகிறவன் வெளியிலை....கட்டுரை எழுதுகிறவன் உள்ளுக்கு.... இது தான் எங்கட.....சீ..சீ...அவங்கட ஐன(?)னாய(நாய்)கம்.
நன்றி
ஈழச்சோழன்
மிக்க மகிழ்ச்சி...
புளியடி புளியடி எவடம் எவடம்.
- அகதி தமிழன்
தென் தமிழீழம், வட தமிழீழம் என்றெல்லாம் கனவு போதையில் மக்களில் ஒரு பகுதியினரை மிதக்கச் செய்து இன்று வன்னியின் வடகிழக்கு மூலையில் மூன்று லட்சம் மக்களை பணயமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கடந்த கால்நூற்றாண்டுகளாக தமிழ் மக்களுக்கு தனிநாடு அமைத்துத் தருவதாக கூறி தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தி இன்று பேரழிவு சூழ்நிலையை உருவாக்கி தமிழர்களை நடுத்தெரு நாயகர்களாக ஆக்கியதில் புலிகளின் பங்களிப்பை நாம் இங்கு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
இந்த தமிழீழ கனவு போதையை ஊட்டி புலிகள் எத்தனை ஆயிரம் இளைஞர்களை, யுவதிகளை, சிறுவர் சிறுமியரை பொது மக்களை புதைக்குழிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் அரசியல் அதிகாரங்களுடன் ஐக்கியமாக வாழ்வதற்கான எத்தனை சந்தர்ப்பங்களை அவர்கள் பாழ்படுத்தியிருக்கிறார்கள், வீண் விரயமாக்கியிருக்கிறார்கள்.
அவர்களது இராணுவ மயப்பட்ட சிந்தனை, யுத்த மயப்பட்ட சிந்தனை அரசியல் ரீதியான தீர்வுக்கான முன் முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாகவே வரலாற்றில் அமைந்திருந்தது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம், சந்திகா அவர்கள் முன்வைத்திருந்த சமஷ்டி முறையிலான தீர்வு யோசனைகள், இறுதியாக ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் எட்டப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வு பற்றிய பரிந்துரை எல்லாவற்றையுமே அவர்கள் நிராகரித்தார்கள்.
இவற்றை அவர்கள் நிராகரித்தது மாத்திரமல்லாமல் யுத்தநிறுத்த காலங்களில் சகோதரப் படுகொலைகளை தீவிரப்படுத்தியதோடு மீண்டும் பாரிய யுத்தத்திற்கான தயாரிப்புக்களிலேயே ஈடுபட்டார்கள்.
தமது யுத்த இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் சகல வளங்களையும் பிழிந்தெடுத்தார்கள்.
உள்ளுரில் மாத்திரமல்ல உலகளாவிய அளவிலும் தமிழர்களின் வளங்கள் சூறையாடப்பட்டன.
நான்கு படைகள் வைத்திருக்கின்றோம், ஒரு அரசை வைத்திருக்கிறோம் இதனை பலப்படுதத வேண்டுமென்று சொல்லி போதையில் கிரங்கவைத்து தமிழர்களின் மனிதவளம் உட்பட அனைத்தையும் வீணாக்கினார்கள்.
பிரமாண்டமான மயானங்களை உருவாக்கினார்கள். இன்று தமிழர்களின் வரலாற்று வாழ்விடம் மயான பூமியாக வெடிமருந்து வீச்சத்துடன் காணப்படுகிறதென்றால் அதில் புலிகளின் பாத்திரத்தை நாம் தவிர்;த்துவிட முடியாது.
தென் தமிழீழம், வட தமிழீழம் என்றெல்லாம் கனவு போதையில் மக்களில் ஒரு பகுதியினரை மிதக்கச் செய்து இன்று வன்னியின் வடகிழக்கு மூலையில் மூன்று லட்சம் மக்களை பணயமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
தமிழர்கள் இயல்பு வாழ்க்கை வாழக்கூடிய இடங்களில் எல்லாம் இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள்.
ஏங்காவது வீதி செப்பனிடப்படுகிறதென்றால் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கொலை செய்கிறார்கள். அண்மையில் கிழக்கில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த டாக்டர்கள் பலர் பல்வேறு காரணங்களால் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிய நிலையில் இங்கு பணி செய்ய முன் வந்த சிங்கள டாக்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.
எங்காவது ஓரிடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடியதான சுமூக சூழ்நிலை ஏற்பட்டால் அங்கு கடற் புலிகளின் ஊடுருவல்களை நடத்தி இந்த மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.
தமது இராணுவ நலன்களுக்காக அவர்கள் மக்களின் நலன்களை எப்போதும் இரண்டாம் பட்சமாக்கியிருக்கிறார்கள்.
புலிகள் என்பது மக்களை விஞ்சிய அமானுச சக்தியாகவும் அந்த அமைப்பு கேள்விக்கிடமற்றது அது தமிழர்களின் ஏகபிரதிநிதி என்ற ஏற்பாட்டை வலிந்து திணித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கேள்வி எழுப்புவர்கள் இதன் யதார்த்தத்துக்கு பொருந்தாத தன்மையை வெளிப்படுத்துபவர்கள். கடந்த 20 ஆண்டுகளாக கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தமக்கு மாறுபாடான கருத்தை கொண்டவர்களையும் தம்முடன் இருப்பவர்களையும் தொடர்ச்சியாக பலியிட்டு வருகிறார்கள்.
ஒரு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு மக்களின் அமைதியான வாழ்வு என்பவற்றிற்கு இப்போது தன்னும் அவர்கள் பங்களிக்க தயாராக இல்லை.
பாரதத்தின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்துவிட்டு தற்போது தாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார்கள். தம்மை தமிழ் மக்களின் ஏகபிரதிநிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும், புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த கோரிக்கை தர்க்க பொருத்துடையதா? தார்மீக நியாயமுடையதா?
இப்போதுதான் சந்தித்திருக்கும் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கும் ஸ்தம்பித்துப் போன தமது சர்வதேச ஆயுத நிதி, கடத்தல் வலை பின்னல்களை மீள் இயங்கச் செய்வதற்கும் திரும்பவும் போரையும் பாசிச வன்முறைகளையும் பெருமெடுப்பில் முன்னெடுப்பதற்காகவுமே அவர்கள் இவ்வாறான பாசாங்கு சொற்களை உதிர்க்கிறார்கள்.
ஓவ்வொரு பேச்சுவார்த்தை சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்குப் பின்னரும் பெரும் நாசங்களை ஏற்படுத்தும் செயல்களிலேயே அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இது கடந்து வந்த கால்நூற்றாண்டுகால அனுபவமும் ஆகும்.
நேபாளத்தில் மாவோயிஸ்டுக்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி அவர்கள் செயற்படுவார்களானால் தமிழர்கள் உட்பட பல தரப்பாரும் அதனை வரவேற்பார்கள். ஆனால் நேபாளத்தின் மாவோயிஸ்டுக்களுக்கு மக்கள் மீதிருந்த பற்றோ நல்வாழ்வின் மீதான அக்கறையோ அரசியல் துரதிருஷ்யோ ஜனநாயக உணாவோ புலிகளிடம் துளியளவும் கிடையாது. அவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது பகிரங்க அரசியல் செயற்பாடுகளுக்கு வந்தபோது ஐ.நா சபையிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டே செயற்பட்டார்கள்.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள் என்றாலே அங்கு இரத்த வாடைதான் வீசும். சுதி அரங்கேற்றத்திற்கு அத்திவாரமாகத்தான் இருக்கும்.
பிரபாகரனதும், புலிகளின் தலைமைத்துவத்தில் உள்ள் பலருரினதும சிந்தனைமுறை அத்தகையதே.
எமது கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் போது ஒருவர் கையில் புளியம் கொட்டையையோ, அல்லது உடைந்த பாணைத் துண்டையோ வைத்து இன்னொருவர் அவரின் கண்களை மறைத்தபடி புளியடி புளியடி எவடம் எவடம் என்று சொல்லி போக்குக் காட்டி கடைசியாக பிறிதொரு இடத்தில் அந்த சிறுவரின் கண்ணை மறைத்த கரங்களை எடுத்து விடுவர்.
இங்கு தமிழீழம் தமிழீழம் என்று 20 வருடம் போக்குக் காட்டி தமிழ் மக்களின் கண்களை போதை மயக்கத்தில் கிறங்க வைத்து இன்று அகன்ற மயான சூழ்நிலையில் தமிழ் மக்கள் நிர்க்கதியாக புலிகளால் விடப்பட்டுள்ளனர்.
எனவே யதார்த்த நிலைகளிலிருந்து மிகவும் சிக்கலடைந்த நிலைமைகளில் இருந்து தமிழ் மக்கள் தம்மை விடுவித்து சமாதான அமைதி நிலவும் அரசியல் அதிகாரங்களுடன் கூடிய வாழ்க்கை நிலையை எய்துவதற்கான பாதையில் நெடும் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புலிகளின் மாய மான் போதைகளுக்கு ஏமாந்து கொண்டிருக்க முடியாது. அது சமூகததின் மொத்த அழிவாக இருக்கும்.
நன்றி: தமிழ்நியூஸ்வெப்
மீண்டு வந்தது மகிழ்ச்சி ஆனாலும் உங்கள் சூழ்நிலை உங்களைச்சுற்றி என்ன நடக்கும் என்பதனையும் கவனத்திலெடுத்து அதிகம் பேசுவதையோ எழுதுவதையோ குறைத்துக் கொள்ளுங்கள். சந்திப்போம்.
good to see you back.
//தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்//
pls do.
வாழ்த்துக்கள் லோஷன்
உண்மையில் அனைவரும் பதறிப்போய்விட்டோம். 4- வருடங்களாக இணையத்தில் இருக்கின்றேன். இந்த பரபரப்பில் தான் அறிந்து கொள்ள முடிந்தது.
வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது என்று நமக்கு தெரிவதில்லை. நாம் நினைத்துப் பார்க்க முடியாததெல்லாம் நடந்துவிடுகின்றது. இருப்பினும் ...
"தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக, விரிவாக நான் விரைவில் பதிவேன்.." என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
தேவையில்லை என்பது என்னுடைய எண்ணம் மட்டுமே. அப்படியே உங்களுக்கு எழுதத் தோன்றினாலும் கவனமாக வார்த்தைகளை கையாளுங்கள்.
தோழமையுடன்
தமிழச்சி
நல்ல செய்தி.
Pls remove akathi thamizan post.
இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகம் பார்வையிடப் படுகின்ற தளங்கள் என அடையாளம் காணப்பட்ட தளங்களுக்கெல்லாம் சென்று சிலர் தங்கடை ஜனநாயகம் மீதான பற்றுறுதிய காட்டுகினம்.
செத்த வீட்டில நிறைய சனம் வந்திருக்கெண்டு தெரிஞ்சாலும் உந்தக் கூட்டம் தன் புத்தியை காட்டாமல் விடாது.
லோசன் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுறுத்தலை போடவும்.
மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க மகிழ்ச்சி!
மீண்டும் இப்படி ஒரு சூழல் ஏற்படாமல் தொடரவும்.
காலையில் உங்கள் பதிவை கண்டதும் மனதிற்கு அமைதியாக இருந்தது..
மீண்டு வந்தமைக்கு மகிழ்ச்சி!
வணக்கம் லோஷன் அண்ணா...
வாழ்த்துகள்..
சற்றே கவனத்துடன் செயற்படுங்கள்......!
நன்றி..
மகிழ்ச்சி.
யாழில் வானொலியில் கேட்ட குரலுக்குரியவரின் வலைபூவை முதல் தடவையாக பார்க்கும் போதே நல்ல செய்தி பார்க்க நேர்ந்த்தது மகிழ்ச்சி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். கருத்துரையிலும் அரசியலை நுழைக்கும் அகதி தமிழனின் போக்கு வருந்த்தத்தக்கது.
வாழ்த்துக்கள் அண்ணா....!!!!!!!!!!!!!!!
தொடரட்டும் உங்கள் பணி...............
eri,aruludan,enrum,nalvalvu,valavalthukkal.....amma.erikku,nanriuadan.
மீண்டு வந்ததில் சந்தோசம் வெளியில் விட்டாலும் அவர்கள் பார்வை உங்களையே சுற்றி வரும். உங்கள் குடும்பத்தாருக்காக அவதான மாக நடந்து கொள்ளவும்.
மலரும் நாட்கள் இனியவையாக அமையட்டும்.
வாழ்த்துக்கள் லோஷன்.
தமிழ் நியூஸ் வெப் இல் வெளியான ஈபீடீபியின் கருத்து இதில் ஏன் எழுதப்பட்டுள்ளது? உங்களுக்கு அந்த கும்பலுடன் தொடர்பு உள்ளதா?
விதுஷன்
மிக்க மகிழ்ச்சி கடவுள் உங்கள கைவிடமாட்டார்
வாழ்த்துக்கள் லோஷன்!
மிக்க மகிழ்ச்சி கடவுள் உங்கள கைவிடமாட்டார்
வாழ்த்துக்கள் லோஷன். அவசரப்படாமல் பொறுமையாகவே பதிவு எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் லோஷன்
//எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.//
மிக்க சந்தோசமான விசயம்! ஏதோ கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்!
//நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..//
மிகவும் கவனமாக எழுதுங்கள், உங்கள் மேல் இருக்கும் அவர்கள் பார்வை மேலும் உக்கிரமாக மாறாமல் எழுதுங்கள்!
மிக்க மகிழ்ச்சி
அவதானமாக இருக்கவும்.
அன்புடன் சுபாஷ்
சந்தோசம்...அண்ணன்...!
அண்ணா,
மிக்க மகிழ்ச்சி.
கவனமாக செயற்படவும்.
வேறென்ன சொல்ல முடியும் எமது தலைவிதி அப்படி!
அண்ணா வாழ்த்துக்க்கள்.
எழுதும் முன் கொஞ்சம் உங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்கலாமே.
உங்களை பிரிந்து இருந்த நாட்கள் எங்களுக்கே கவலையாக இருந்தது என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது ......... கொடுமை அண்ணா.
அநியாயத்துக்கு எதுராக எழுவது தப்பு அல்ல. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை யோசியுங்கள்.
this s my kindly request......... if u can, do it.
thxs.
அண்ணா வாழ்த்துக்க்கள்.
எழுதும் முன் கொஞ்சம் உங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்கலாமே.
உங்களை பிரிந்து இருந்த நாட்கள் எங்களுக்கே கவலையாக இருந்தது என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது ......... கொடுமை அண்ணா.
அநியாயத்துக்கு எதுராக எழுவது தப்பு அல்ல. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை யோசியுங்கள்.
this s my kinsly request.
If u can, do it....
thxs.
வணக்கம் அண்ணா மீண்டும் உங்களை விரைவாக வலைப்பதிவில் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்களது அறிவிப்பு பணி
அண்ணா வாழ்த்துக்க்கள்.
எழுதும் முன் கொஞ்சம் உங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்கலாமே.
உங்களை பிரிந்து இருந்த நாட்கள் எங்களுக்கே கவலையாக இருந்தது என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது ......... கொடுமை அண்ணா.
அநியாயத்துக்கு எதுராக எழுவது தப்பு அல்ல. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை யோசியுங்கள்.
this s my kindly request.
If u can, do it....
thxs.
அண்ணா வாழ்த்துக்க்கள்.
எழுதும் முன் கொஞ்சம் உங்கள் குடும்பத்தை பற்றி யோசிக்கலாமே.
உங்களை பிரிந்து இருந்த நாட்கள் எங்களுக்கே கவலையாக இருந்தது என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது ......... கொடுமை அண்ணா.
அநியாயத்துக்கு எதுராக எழுவது தப்பு அல்ல. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை யோசியுங்கள்.
this s my kindly request.
If u can, do it....
thxs.
மிகவும் சந்தோஷம் லோஷன்...
சிறிது காலத்துக்கு கமெண்ட் மாடரேசன் செய்து கொள்ளவும்.
அக்கறையுடன் என் தாழ்மையான கருத்து.
Best Wishes!
The struggle for freedom in a non violent way (India, South Africa) always wins.
அண்ணா,
மீண்டு(ம்) வந்தது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது... என்றுமே வெற்றி உங்கள் பக்கம்தான்...
வாழ்க வளமுடன்.
மதுவதனன் மௌ.
நீங்கள் விடுதலையானது நிரம்ப மகிழ்ச்சி..!!!
உங்கள் பணியை (கவனமாக) தொடரவும்...
மிகவும் மகிழ்ச்சி.பதிவுகள் தொடரட்டும்.
உங்கள் பதிவுபகள்ப் பக்கம் எட்டிப் பார்த்தேன்.அப்படியென்னங்க சிறை பிடிக்குமளவுக்கு அதில் உள்ளது.யதேச்சையான எழுத்துக்களின் வெளிப்பாடுதானே அது?
வாழ்த்துக்கள் லோஷன்..
இனி கவனத்துடன் செயல்படுங்கள்..
அதிகார வர்க்கம் உங்களை கண்காணிப்பில்தான் வைத்திருக்கும்.. எதற்கும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..
வாழ்க வளமுடன்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி...
உங்கள் பணியை சிறப்பாக தொடருங்கள். வாழ்த்துக்கள்!!
//அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்//
இனிவரும் 'சில' காலங்களுக்கு அவதானமாக இருப்பது நலம், பலகண்கள் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் அவதானிக்கும்...!
யூதர்களுக்கு ஒரு கிட்லர் தமிழர்களுக்கு ஒரு மகிந்தா!
பாசிசம் ஒழிக்கபடுதல் வேண்டும்.. தாங்கள் எதற்கும் பயப்படாமல்
முன்பு விட தீவிரமாக செயல்படுதல் வேண்டும்..
---புரட்சிகர தமிழ் தேசியம்
http://siruthai.wordpress.com/
வாழ்த்துக்கள் லோஷன், அவதானமாக இருங்கள்.
சார் என் வலைப்பூவுக்கு முகவரி தேடிக்கொடுத்த நண்பர் நீங்க(லோஷன்).....
பக்கத்து பக்கத்து கனனிகளில் அமர்ந்து கொண்டு போட்டிபோட்டு பதிவெழுத நீங்கள் இல்லாததால் என் தளத்தை நானே தடை செய்து விட்டேன். லோஷன் சார் கெதியா வாங்க போட்டி போட்டு பதிவெழுதலாம் சண்டை பிடிக்கலாம்.
வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு நீங்க சொன்ன மாதிரி கடமையை பொறுப்போடு செய்த ஒரு திருப்தி. (உதவி முகாமையாளராக வெற்றி வானொலியின் நடவடிக்கைகளை சொன்னேன்.)
என்னுடைய எழுத்துக்களின் மீது சத்தியமாக வார்த்தைகளை விட மௌனம் வலிமையானது.
நண்பன் HISHAM........
நீங்கள் நல்லபடியாக திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள்! நண்பர் LOSHAN ...
தொடரட்டும் உங்கள் பணி.. ஆயினும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள். என்ன பன்னுவது சில நேரங்களில் கவனமும் தேவைதான்..
Dear Loshan..good to know that you are back.... :)
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துகள்
Soo glad that you are well. Cannot wait to hear your voice on radio
Gangan
London
பதிவுலக நண்பர்கள் மட்டுமல்லாது, கூகிள் குழுமங்களிலும் உங்களின் விடுதலைக்காக பலரும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
அனைவரின் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்துள்ளது.
மிகவும் மகிழ்ச்சி நண்பரே.
"குற்றங்கள் ,சந்தேகங்கள் எதுவுமற்று நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்".
இது தான் முக்கியம்.
மகிழ்ச்சி!
மீண்டு வந்ததில் மகிழ்ச்சி
உங்கள் பணிகள் தொடரவும் சிறக்கவும் வாழ்த்துகள்!
எவ்வித துன்பங்களுக்கும் உட்படாது நல்ல முறையில் மீண்டு வந்த செய்தியே எம்மை மிகவும் மகிழ்சியில் ஆழ்த்தியது.
குடும்பத்தாரோடு நேரம் செலவழியுங்கள். கவனமாய் செயலாற்றுங்கள். வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவிலும் வந்து நாகரீகமற்ற முறையில் பின்னூட்டமிடுதலைப் பார்த்தால் இந்த ஜென்மங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே அந்த பின்னூட்டத்தை தயவுசெய்து நீக்கிவிடுங்கள்.
வாழ்த்துக்கள் லோஷன்!
எனக்கும் உண்டு அந்த அனுபவம் பதிந்துவிட்டிருக்கிறேன்.
சற்று ஓய்ந்து உங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு
அனுபவத்தை நீங்களும் எழுதுங்கள்.
சும்மா கை அரிச்சுது....மீ த 100
அண்ணா... மிகவும் சந்தோசம். கழுகுக்கண்கள் வட்டமிடும் போதும் உங்கள் ஊடகப்பணி செவ்வனே அமைய வாழ்த்துக்கள்.
மீளச் சந்திப்பதில் மகிழ்ச்சி லோசன். சிறிலங்கா அரசு விடுதலை செய்தாலும், சுற்றியுள்ள சிங்கள மக்கள் அக்குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பார்களா? எனவே அவ்விடயம் தொடர்பாகவும் அவதானமாகவே இருங்கள்
விரிவாக ஆறுதலாக எழுதுங்கள் !!
{எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.}
இது மகிழ்ச்சியைத் தருகிறது.எனினும்
ஊறு என்பது உளம் சார்ந்தது. தேவையற்ற கைதே ஒரு அச்சுறுத்தல்தான்,தேவையற்ற கைதே ஒரு வதைதான்.தேவையற்ற கைதே தமிழனின் மானத்திற்கு வைக்கப்பட்டிருக்கிற நெருப்பு. இதில் சந்தோசப்பட எதுவுமேயில்லை.நீங்கள் உயிரோடு திரும்பினீர்கள் என்பதே
எமது சந்தோசம். வாழ்த்துக்களோடு
தமிழ்சித்தன்
மிகுந்த மன ஆறுதலை தந்திருக்கிறாது. ஆனால் பலரும் சொன்னபபடி அவதானமாக இருங்கள்
வாழ்த்துகள் லோஷன்...
//இந்தப் பதிவிலும் வந்து நாகரீகமற்ற முறையில் பின்னூட்டமிடுதலைப் பார்த்தால் இந்த ஜென்மங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே அந்த பின்னூட்டத்தை தயவுசெய்து நீக்கிவிடுங்கள்.// ஜோசப் பால்ராஜ்
எப்படியா இது ? என்ன உரிமையோட இதைச் சொல்றீங்கய்யா நீங்கள்ளாம் ? அது தொடர்பு இருக்கா இல்லையானு ப்ளாக் உரிமையாளர் முடிவு பண்ணட்டும். புலிகளை விமர்சிப்பவர்களை எலிமினேட் பண்ணுறதுக்குன்னே பொறந்திருக்கீங்களா ?
என்னைக் கேட்டா இந்தப் பதிவுக்கும் அந்த பின்னோட்டத்திற்கும் தொடர்பிருக்கு. அப்பின்னூட்டம் இப்பதிவாளரின் போக்கில் திருப்பத்தினை வேண்டி அவருக்கு கூறப்படும் அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் அப்பின்னூட்டம் அமைந்துள்ளது.
தாமதாகவே செய்தியை வாசிக்க நேர்ந்தது; வெகுவிரைவில் மீணடது மகிழ்ச்சி :)
லோஷன் அண்ணா, சொல்ல வார்த்தைகளே இல்லை... அவ்வளவு துன்பமாக,கோபமாக உணர்ந்த அந்த ஏழு நாட்கள் கொடுமையானவை... எங்கள் அனைவருடய பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை. கொஞ்சம் சுய நலமாக, உஙகள் சொந்த வாழ்க்கைக்கு முதலிடம் கொடுங்கள் பிளீஸ்...
சந்தோசம் அண்ணன்...!
வாழ்த்துக்கள், நல்லது நடக்கட்டும்...
:)..... GOD Bless Anna..
வாழ்த்துக்கள்...
திரு.லோசன்.
வாழ்த்துக்கள் லோஷன்! தொடரட்டும் உங்கள் பணி!
வாழ்த்துக்கள் நன்பரே! இறையருளால் நீங்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது நிம்மதியை தருகிறது.
நிம்மதியாய் உணர்கிறேன்!!
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்பாவித் தமிழர்கள் அனைவரும் விடுதலையாகவேண்டும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரரே..!!!!!
அரிய பணி மேன்மேலும் சிரக்கட்டும்...!!!!
"//எப்படியா இது ? என்ன உரிமையோட இதைச் சொல்றீங்கய்யா நீங்கள்ளாம் ? அது தொடர்பு இருக்கா இல்லையானு ப்ளாக் உரிமையாளர் முடிவு பண்ணட்டும். புலிகளை விமர்சிப்பவர்களை எலிமினேட் பண்ணுறதுக்குன்னே பொறந்திருக்கீங்களா ?
என்னைக் கேட்டா இந்தப் பதிவுக்கும் அந்த பின்னோட்டத்திற்கும் தொடர்பிருக்கு. அப்பின்னூட்டம் இப்பதிவாளரின் போக்கில் திருப்பத்தினை வேண்டி அவருக்கு கூறப்படும் அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் அப்பின்னூட்டம் அமைந்துள்ளது//"
யார் யாருக்கு அறிவுரை கூறுவதென்று விவஸ்தையே அல்லாமல் போயிட்டு.
இவர் தானே, தனக்கு வக்காளத்து வாங்கிறார் பாவம். அந்த நாகரிகமற்ற பதிவை போட்டவரும் அவர்தான். விடுங்கய்யா.... வந்தது போனதெல்லாம் எழுதத் தொடங்கினால் இப்படித்தான்..
வணக்கம் லோஷன் அண்ணா, இது போன்ற சம்பவங்கள் எத்தனையே பேருக்கு நிகழ்ந்த்திருந்தாலும் இதுவே முதல் தடவை இந்தளவு நான் கவலை கொண்டதும்,நீங்கள் மீண்டவுடன் அடைந்த மகிழ்சியும் அடைந்ததும்.
//அனைவருக்கும் நன்றிகள் என்ற உன்னத வார்த்தையைத் தவிர இப்போதைக்குத் தர ஏதுமில்லை என்னிடம்..//
எனக்கும் கூட லோஷன் அண்ணா, பிராத்தனை என்பதை தவிர வேரு எதுவுமே செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் தான்.
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், மறுபடியும் தர்மம் வெல்லும்" வென்றது. "கோடி நன்றிகள் இறைவனுக்கு"
வாழ்த்துகள் லோசன். நீங்கள் மீண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகள்.
அண்ணா ஒவ்வொரு நாளும் ரேடியோ ல வெற்றி ல உங்க குரல கேக்குறதுக்காக ஏங்கினேன்..தொடரட்டும் உங்கள் பணி.
உங்களுக்கு ஒரு அனுப்பினாத்தான் எப்பவும் போல எடக்கு மடக்கா நெஞ்சுக்கு நிம்மதி.
இர்ஷாத்
வாழ்த்துக்கள் Loshan!
கீழ்த்தரமானவர்களின் கண்ட குப்பைகளையெல்லாம் ஏன் இதில் எழுத இடமளிக்கிறீர்கள். தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
இனியவன்
தமிழ் உணர்வு மிக்க உங்கள் குடும்பம் பற்றி நான் நன்கு அறிவேன். உங்கள் பணி அஞ்ச நெஞ்சுடன் தொடரட்டும்.
வேலவன்
மிக்க மகிழ்ச்சி லோசன் அண்ணா.பெ௫ம் அதிர்சி அடைந்தோம் அதேபோல இப்போது எமக்கு சந்தோசம் அண்ணா,இது ஒ௫ தம்பியின் அட்வைசாக எடுத்து கொள்லுங்கோ "நாம் கொஞ்ச நாட்களுக்கு கிரிக்கட் பக்கமே நிப்பம்"இபபோதைய நிலமையில் ஒ௫ ஊடகவியலானணுக்கு இலங்கையில் வாய் பூட்டு போடப்பட்டுள்ளது,இந்த அடக்குமுறைக்கு காலம்தான் பதில் சொல்லவேனும் அதனால் அண்ணா எதற்கும் நாம் கொஞ்சம் கவனமாக நடப்பம்.பாவம் உங்கள் பிள்ளை தான் இந்த ஏழு நாட்கழும் என்ன பாடுபட்டி௫ப்பானோ எல்லாத்துக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நண்றியை தெ௫விப்போம்...
அண்ணாவின் விடுதலைக்காய் பாடுபட்ட அவருடைய குடும்பத்தார், நண்பர்கள், இணையத்தள சொந்தங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்!
நீங்கள் விடுதலை ஆன பின்னர் உங்கள் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க நேரம் கிடைக்கவில்லை.மீண்டும் உங்கள் காலை நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவிட்டீர் என நம்புகிறேன்.
மேலே ஒரு நலன் விரும்பி குறிப்பிட்டது போல, உங்கள் 7 நாள் அனுபவத்தை பதியும்பொது கவனம்.இன்றைய இலங்கையின் நிலை அப்படி.
Hi LOSHAN,Its good to know that u released.continue ur work.we always with u
மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி லோஷன் அண்ணா! கைது செய்துவிட்டுக் காரணம் தேடுகிற உலகில் தொடரப்போகும் பயணத்தில் அவதானமாக இருங்கள்...
மிகத் தாமதமாகத் தெரியவந்தது. தற்பொழுதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி லோஷன் .............இறைவனிடம் வேண்டியது வீண் போகவில்லை .........எந்த துன்பமும் இளைக்கபடவில்லை என்பதை அறிந்ததில் நிம்மதி.....வாழ்த்துக்கள் .........
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி லோஷன் .............இறைவனிடம் வேண்டியது வீண் போகவில்லை .........எந்த துன்பமும் இளைக்கபடவில்லை என்பதை அறிந்ததில் நிம்மதி.....வாழ்த்துக்கள் .........
மீண்டு(ம்) வந்ததில் மிக மகிழ்ச்சி. உண்மையில் உங்களைத் தெரியாது. உங்கள் மகனுடைய முகத்தைப் பார்த்ததும் 'பிள்ளை தேடுமே'என்று கவலையாக இருந்தது.
மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது உங்கள் கைது அறிந்து. உங்கள் குடும்ப நண்பரான அனோஜா எனக்கு நெருங்கிய தோழி. அவரும் மிகவும் கவலைப்பட்டார். ஆனால் இப்போது நீங்கள் வந்தது மட்டுமல்லாமல் உங்கள் பதிவை திரும்பவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த வலைப்பூவில் எமது உணர்வுகளை கொட்டி அதனால் திரும்பவும் உங்களுக்கு கஷ்டம் வந்துவிடக் கூடாது என்று தான் இதுவரை எதுவும் எழுத பயந்தேன்..ஆனால் இத்தனை பின்னூட்டங்களை பார்க்கும் போது ...மனதில் சந்தோஷமும், தைரியமும் வருகிறது. வாழ்த்துகள் சகோதரா! இனிமேலும் எந்த இடரும் வராமல் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எல்லாம் வல்ல மேலான சக்தி காப்பாற்ற வேண்டும்.
hi anna,
ஹாய் அண்ணா,
உண்மையில நாங்க நிறைய கவலை பட்டோம் ..
உங்களை கைது செய்தது தொடர்பாக , முதலாவது பதிவு செய்தது நான் தான் .
( இணைய செய்திகளின் தொகுப்பாக ஒரு பதிவை வைத்திருந்தேன் )
தற்போது நான் இந்த பதிவுகள் எல்லாவற்றையும் நிறுத்தி உள்ளேன் ...
நான் தற்போது இலங்கையில் இல்லை , ஆனால் எனது குடும்பத்தினரிடம் சிலர் சென்று , எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ..
அதன் பின்பு .. எனது தாயார் என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார் .. இப்படியான வேலைகள் செய்யவேனம் என. ...
இப்ப அனோனிமஸ் ல எழுத வேண்டிய நிலைமை என்ன செய்ற ...
நன்றி -
Post a Comment