மீண்டு(ம்) வந்துவிட்டேன்...

ARV Loshan
135
நன்றி நண்பர்களே..

உங்கள் பிரார்த்தனைகள்,வேண்டுதல்கள்,அன்பு,அக்கறை,ஆதங்கம்,ஆவேசம்,உண்மையான கவலை என்று அனைத்தின் பயனாகவும்,எனது குடும்பத்தாரினதும்,நண்பர்களினதும் இடைவிடாத முயற்சிகளினாலும் இன்று பிற்பகல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரினால் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட்டு,குற்றங்கள் ,சந்தேகங்கள் எதுவுமற்று நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

வீட்டுக்கும்,எனது உறவுகளுக்கும் தொலைபேசி மூலமாக ஆறுதல் அளித்து வந்த சொந்தங்கள்,நட்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

முகம் தெரியாத ஏராளமான அன்புள்ளங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டு பதிவுகள் இட்டமைக்கும்,கவலைப் பட்டுப் பதிவுகள் இட்டமைக்கும் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ???

இன்று பிற்பகல் வீடு வந்து நண்பர்களின் அழைப்புக்கள்,உறவினர்களின் நலன் விசாரிப்புக்களுக்குப் பிறகு பத்திரிகை செய்திகளையும்,இணையத்தின் செய்திகளையும் பார்த்தவுடன் உண்மையில் நன்றிகளோடு ஆச்சரியப்பட்டுப் போனேன், விதமாக எத்தனை பேர் எனக்காக,ஒரு ஊடகவியலாலனுக்காக கவலைப்பட்டுக் குரல் எழுப்பியுள்ளார்கள் என்று.

அனைவருக்கும் நன்றிகள் என்ற உன்னத வார்த்தையைத் தவிர இப்போதைக்குத் தர ஏதுமில்லை என்னிடம்..

எனக்கு எந்த ஊறுகளோ,அச்சுறுத்தல்களோ,வதைகளோ இந்த ஏழு நாட்களில் இழைக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.

தனிமையான,புதிய,அடுத்தது என்ன என நான் அறியாமல் இருந்த அந்த ஏழு நாட்கள் பற்றி நிச்சயமாக,விரிவாக நான் விரைவில் பதிவேன்..

இந்தவேளையில் மட்டுமல்ல என் வாழ்வின் எந்த வேளையிலும் உங்கள் எல்லோரையும்,என் குடும்பத்தாருக்கும் என் விடுதலைக்கும் உதவிய என்னுயிர் நண்பர்களையும் நான் நினைந்திருப்பேன்.

Post a Comment

135Comments

Please Select Embedded Mode To show the Comment System.*