
செப்டெம்பரில் ஆரம்பித்த என் வலைப்பதிவுப் பயணத்தில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகள் இட்டுவிட்டேன்..
இதுவரை 25000+ ஹிட்ஸ் கிடைத்துள்ளன. தினமும் தவறாமல் வருகை தரும் அன்பு நெஞ்சங்களும் கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..
எனது எழுத்துக்கள் /பதிவுகள் உங்களுக்குப் பிடித்தனவாக அமைவது கண்டும் மகிழ்ச்சியே.ஆனால் நான் எனது பதிவுகளில் இதுவரை இவற்றைத் தான் எழுதுவேன் என்றோ,இதைத் தான் எழுதவேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொண்டதில்லை..எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை உடனே எழுதிவிட வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன்.
சில நாட்களிலேதையும் எழுத மனதில் தோன்றாது.
ஹிட்ஸ் அதிகமான நாட்களை அடுத்த நாட்களில் ரொம்பவும் உற்சாகமாக ஏதாவது பதிவொன்றை இடவேண்டும் என்று மனம் உந்தும்.அந்த வேளையில் ஏதாவது சுவார்சயமான விஷயத்தை நானே தேடியெடுத்து எழுதிப் போட்டுவிடுவதும் உண்டு.
நண்பர்கள் அனுப்பும் சுவாரஸ்யமான படங்களும்(இலேசில் மற்றவர் கண்களுக்குத் தட்டுப்படாதவை மட்டும்) என் பதிவுகளில் வரும்.
ஆனால் அரசியல் பதிவுகளும் கிரிக்கெட் பற்றி எழுதும் பதிவுகளும் தான் கூடுதலான வரவேற்பை இதுவரை பெற்றிருக்கின்றன. எனினும் எனது பதிவுகளில் எல்லாம் வரும்.அனானிகள் உட்பட நான் எல்லோரையும் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரவர் தத்தம் கருத்துக்களை சொல்லி தெளிவு பெறட்டும்.ஆகவும் ஓவரானால் மட்டும் நான் தலையிடுவேன்.. ;)
எனது தனிப்பட்ட ஒலிபரப்பு வாழ்க்கை,தனிப்பட்ட உணர்வுகளை எழுதினாலும் கூட என் வலைப்பூவை ஒரு personal digital diaryஆக மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.
இன்னொன்று,பத்தாண்டு கால ஒலிபரப்பு வாழ்க்கை பற்றி எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது.. முழுமையாக பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத மூட் வாய்க்கவில்லை.. எப்போது மூட் வருகிறதோ,நேரமும் கூடி வருகிறதோ அப்போது தொடர்வேன்.
இப்போதைக்கு என் மனதில் படுபவை வரும்.
பின்னூட்டங்களின் எண்ணிக்கை தான் ஒரு பதிவின் தரத்தையும்,வரவேற்பையும் தீர்மானிக்கின்றன என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடில்லை.
ஆனால் தமிளிஷ், தமிழ்மணம் போன்றவையே (இப்போது இன்னும் பல புதிய வலைச்சரங்களும் தோன்றி வளர்ந்து வருகிண்டறன) நண்பர்களையும் வருகைகளையும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை..
வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு வாசிப்பது கூடியுள்ளது. பல புது விஷயங்கள் தெரியவந்துள்ளது.
நண்பர்கள் கூடியுள்ளார்கள்.
பல புதிய சொற்பதங்கள் தெரிய வந்துள்ளது.. (பின்னூட்டம்,கும்மி,அனானி,மீ த பர்ஸ்ட், கும்மி, மொக்கை.. இப்படிப் பலபல.. )
ஆனால் அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்..
அடுத்தது காண்பது,கேட்பதையெல்லாம் பதிவாக்கிவிட மனசு நினைக்கிறது..
எல்லாவற்றையும் கொட்ட வடிகால் கிடைத்துள்ளது. ஆனால் நேரம் இல்லாத நேரம் பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு அடிமையாக்கி விட்டதோ என்று சில சமயம் சிந்திக்கிறேன்.
பதிவராகி நடை பழகியாச்சு..
இன்னும் பறக்க பல தூரம் கடக்க வேண்டும்.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.. வருகைகளும்,வாசிப்புகளும் தான்..

===============================================
உலகின் முடிவு?
இவை நான் பார்த்து அதிசயித்த graphix பிரம்மாண்டம். ஒவ்வொன்றுக்கும் எல்லை இருப்பது போல உலகுக்கும் இருந்தால்? உலகின் முடிவிடம் இப்படித் தான் இருக்குமோ???
15 comments:
தினசரி பத்திரிகை வாசிப்பது போல் உங்கள் பதிவுகளையும் வாசிப்பது உண்டு.
உங்கள் அரசியல் , விளையாட்டு தலைப்புக்கள் அஹா ,, ஓஹோ .
உங்கள் எழுத்து நடவடிக்கை தொடர வாழ்த்துக்கள்.
கலக்கல் சகா. வலைபயணம் மேலும் இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.
தொடரட்டும்...
வாழ்த்துகள் லோஷன், ஹிட்ஸ் 25000 தாண்டி இன்னும் போக கூடிய விஷயம் உங்கள் பதிவுகளில் இருக்கிறது... சும்ம்மா கலக்குங்கணன்ணா.... சும்மா அதிருதில்ல
ம் திரு.லோசன் அவர்களே! நீங்கள் ஊடகத் துறையில் உள்ளதை உங்களின் பதிவுகள் சொல்கின்றன.
சொல்ல வருகின்ற கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எழுதும் பழகம் தங்களுக்கு உண்டு என்பதால் நீங்கள் நிட்சயம் எங்கள் எல்லோராலும் விரும்பப்படும் பதிவர் ஆகிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
cograts!!!....loshan anna........
keep doing ur great job......
expecting ur "paththaandu saathanai part3".....
....usual visitor....
///அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்.. ///
Computer on பன்னியதுமே நான் செல்வது உங்களுடைய வலை பக்கத்திற்குதான் லோசன் அண்ணா. பதிவுகள் இல்லாத போது கவலை பட்டதும் உண்டு. உங்களுடைய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
அதற்குள்ளாகவே 25 000?? பெருமையாக உள்ளது. எங்கள் அன்பான வாழ்துகளும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கின்றோம் :)
வாழ்த்துக்கள்!
ஆனா, உங்க பக்கத்துல pop-up ad வருது. கவனிங்க! :)
நீங்கள் நீங்களாய்; எந்த அரிதாரமும் இல்லாமல் சுயம் காட்டுவது இதில் தான். பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் சிலவற்றை மறுதலித்தாலும்; எப்போதும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு. எனக்கு தெரிந்த லோஷனை இருவராக பார்க்கிறேன். அதில் ஒருவரை ரசிக்கிறேன். மற்றவருடன் என் எதிர்ப்பை காட்டுகிறேன். இணையத்தில் உள்ள சுதந்திரம் எல்லாருக்குமானது தானே?
இனி நீங்க banner ad போடலாம். 25000 hits எண்டால் நல்ல charge பண்ணலாம் :)
அந்த குஷிகுமார், கட்டாம்பெட்டி கந்தசாமி, பேபர் தம்பியின்ட சாவி எல்லாம் நீங்கதான் எண்டு தெரியுது இந்த Blog பார்த்தால!
லோஷன் நாளைக்கு இந்த பேட்டியில எத்தன ஜோக் இருக்கு எண்டு ப்ரோக்ராம் நடத்தலாம்
இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று :)சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்?
"எமது மக்களைப் பாதுகாப்பதற்காக :) நாம் எவ்வாறான தியாகங்களையும் :)செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம். காலநேரம் வரும்போது :) சரியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு குறைந்திருக்கிறதா?
"மாறாக நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும் தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.''
இந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''
"இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.''
ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா?
"தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள்கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென்றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த :)நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் :) சிறீலங்காவின் அரசபடைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதுவே யதார்த்தம்.''
தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆதரவு நிலை ஈழப்போராட்டத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?
"தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முழு இந்திய மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.''
வைகோ, அமீர், சீமான் ஆகியோர் உங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் களே. ஈழ ஆதரவு நிலைப்பாடு தமிழக கூட்டணி அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் போலிருக்கிறதே?
"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் அணி திரள்வதையே நாம் விரும்புகின்றோம்.:) தமிழக உள்ளூர் அரசியலுக்குள் தலையிடாமல் இருப்பதே எமது கொள்கையாகும். தமிழர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதையே நாம் விரும்புகின்றோம் :).''
மூத்த தமிழ் அரசியல்வாதியாகவும் தமிழக முதல்வராகவும் ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?
"கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். :) இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்துவருகிறார்.''
நீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே?
"இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனைகதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனைகதைகளை உருவாக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்த்துக்கள் அண்ணா !!
// வாழ்த்துக்கள்!
ஆனா, உங்க பக்கத்துல pop-up ad வருது. கவனிங்க! :)// ஆமாம் Safariஇல் இது பெரிய பிரச்சினையாக உள்ளது
வாழ்த்துக்கள் லோஷன் நன்றாக அடித்துவிளையாடியுள்ளீர்கள். விரைவில் 50000 தாண்ட வாழ்த்துக்கள்.
லோஷன் நாளைக்கு இந்த பேட்டியில எத்தன ஜோக் இருக்கு எண்டு ப்ரோக்ராம் நடத்தலாம்
//
அது போல இந்த பக்கத்துக்கு எத்தனை ஜோக்கர்கள் வருகிறார்கள் என்றும் கேள்வி கேட்கலாம்.
இப்போ இங்கே ஒருவர் வந்து சென்றிருக்கிறார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுறுசுறுப்பான காங்கிரஸ்காரர். தன்னுடைய எண்ணங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தக்கூடிய தைரியசாலி. ஒரு இனிய மாலையில் இந்திரா நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
உங்கள் பேச்சுகள் ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு எதிராக இருக்கிறதே? ஈழத் தமிழர்கள் மீது உங்களுக்கென்ன கோபம்?
``நான் எப்போதும் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக பேசியது கிடையாது. மாறாக, அவர்களுடைய நல்வாழ்விற்குத்தான் குரல் கொடுத்து வருகிறேன். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அதனுடைய மூலசூத்திரதாரி பிரபாகரனை இலங்கை அரசாங்கம் பிடித்து, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றத்துக்காக இந்தியஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.''
ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப்புலிகள் என்றால் இந்திராகாந்தியைப் படுகொலை செய்தது சில சீக்கியர்கள். அதற்காக ஒட்டுமொத்த சீக்கியர்களை ஒதுக்கிவிட முடியுமா? இன்று நமது பிரதமரே சீக்கியர்தானே?
``ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பிரபாகரனையும் மற்றும் அவருடைய இயக்கத்தையும்தான் எதிர்க்கிறோமே தவிர ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை அல்ல. இந்திராகாந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே போன்றவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ராஜீவ்காந்தி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிற பிரபாகரனை சட்டத்தின் முன் கொண்டு வரவேண்டும். தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.''
சோனியாகாந்தியே அதை மன்னித்துவிட்டாரே?
``சோனியாகாந்தி மன்னித்துவிட்டார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படி மன்னித்து இருந்தால், அதற்குக் காரணம் சோனியாகாந்தியின் தியாக உள்ளமும், பரந்த மனமும்தான். எங்களுக்கு அது கிடையாது. மக்களுக்கும் கிடையாது. ஆகவே நாங்கள் விடுதலைப்புலிகளை மன்னிக்கமாட்டோம். நான் கடைசியாக இந்த விஷயத்தில் சொல்ல வருவது, இந்த இலங்கைப் பிரச்னையை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையைச் சார்ந்த பெரியவர் பாரதிராஜா போன்றவர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, தமிழக மக்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.''
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உங்கள் திட்டம் என்ன?
``இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஒரே வழி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுவதுதான். இலங்கை அரசும் பிரபாகரனை தவிர்த்த மற்ற தமிழ்த் தலைவர்களும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும்.''
மகாராஷ்டிராவில் வடமாநிலத்தவருக்கு பிரச்னை என்றதும் வடஇந்தியா முழுவதுமே கொந்தளித்து எதிரெதிர் அணியில் இருக்கும் லாலுவும், நித்திஷும்கூட இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் தமிழர் பிரச்னை என்று வரும்போது அதை யாரும் பெரிய பிரச்னையாகப் பேசுவதில்லை, ஏன் இந்த பாரபட்சம்?
``மகாராஷ்டிராவில் நடந்தது நாட்டினுடைய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் ஒரு செயல். அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதோடு ஒப்பிட்டு இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்னையில் ஏன் அக்கறை காட்டுவதில்லை என்பது சரியில்லை. ஏனென்றால் இலங்கை என்பது வேறொரு நாடு. அந்நிய நாட்டு பிரச்னைகளில் சில வரையறுக்கப்பட்ட வழிகளில்தான் தலையிடமுடியும்.
இந்தியாவில் பல மசூதிகள் தாக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியா மீது படையெடுக்க முடியுமா? ஒரிசாவில், தமிழகத்தில் மாதா கோயில்கள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. பாதிரியார்கள் முதற்கொண்டு பல பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நம்மீது படையெடுத்து வந்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.''
உங்களுக்கு கலைஞர் மற்றும் தி.மு.க. அரசு மீது என்ன கோபம்? எப்போதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே?
``ஆழ்மனதில் கண்டிப்பாக யார் மீதும் என்னைப் பொறுத்தவரை கோபம் கிடையாது. மக்களுக்கு சில பிரச்னைகள் வரும்போது அந்த பிரச்னைகளைப் போக்கவேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன் என்ற காரணத்தால் வெளிப்படையாக சில சமயம் பேசுகிறேனே தவிர, யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறை காழ்ப்புணர்ச்சி கிடையாது. உண்மையில் கலைஞர் அவர்கள் இந்த வயதிலும் கடுமையான உழைப்பாளி என்பதை நான் மதிக்கிறேன். எப்படி இது சாத்தியம் என்று கூட பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்
Post a Comment